மாவனல்லை கடைத்தொகுதியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் மாவனல்லை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னாள்
அமைந்துள்ள கடைத்தொகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 17
கடைகள் தீப்பிடித்து எரிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள்
தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து
தற்பொழுது தீயை கட்டுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: Daily Ceylon
-AsM-
0 Comments