நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில், பதுளை மாவட்டத்தில் ரிசாட் பதியுதீன்
தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மலையக முஸ்லிம்
கவுன்ஸில் ஆகியவற்றுடன் இணைந்து இரட்டை இலை சின்னத்தின் கீழ் போட்டியிட
போவதாக ரவூப் ஹக்கிம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று
செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
துஆ என அழைக்கப்படுகின்ற ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலை
சின்னத்திலேயே இவை இணைந்து போட்டியிடவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி
தெரிவித்துள்ளார். இதற்காக இம்மூன்று கட்சிகளிடேயேயும் புரிந்துணர்வு
ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
நேற்றுவரை ஒன்றினைவது தொடர்பான அறிவிப்புகள் வெளிவராத நிலையில் பல செய்திகள் வெளியாகின ஆனால் இன்று அனைத்தையும் பொய்யாக்கி இவர்கள் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ் இனிவரும் காலங்களிலும் இவர்களின் ஒற்றுமை தொடர இறைவன் அருள்புரிவானாக. (ஆமீன்)
0 Comments