Subscribe Us

header ads

ஊவா தேர்தலில் முஸ்லிம்கள் ஓரணியில் போட்டியிடுவது தொடர்பான உயர்மட்ட சந்திப்பு…

எம் ஐ அமீர்.

நடக்கவிருகின்ற ஊவா மாகாண சபை தேர்தலில், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது சம்மந்ததாக அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்த முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களிடமும் பிரதிநிதித்துவத்தை பெறுவதில் அக்கறையுள்ளவர்களிடமும் ஊவா மாகாண மக்கள் குறிப்பாக மலையக முஸ்லிம் கவுன்சில் விடுத்த வேண்டிக்கொன்டதன் பயனாகவும் உத்தியோகபற்றற்ற முறையில் கட்சிகள் பேசிக்கொண்டதன் காரணமாகவும்.

ஊவா மாகாண சபையில் முஸ்லிம்கள் ஓரணியில் போட்டியிடுவது தொடர்பான உயர்மட்ட சந்திப்பு ஒன்று இன்று காலை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களது இல்லத்தில் நடைபெறுள்ளது .

தேசிய சூரா சபையில் ஏற்பாட்டிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்போது தேசிய சூரா சபையின் தலைவர் தாரீக் மஹ்மூத், பிரதித் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments