Subscribe Us

header ads

ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் முடியுமென்றால் மோதி பார்க்கட்டும் - ஞானசார தேரர் சவால்..!

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஐந்து பேருக்கு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது.

அமைச்சர்களான டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச,  ரிசாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இந்த சவால் விடுக்கப்பட்டுள்ளது.

முடியும் என்றால் பொது விவாதமொன்றில் மோதுமாறு குறித்த அமைச்சர்களுக்கு, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

இனவாதத்தை தூண்டுவதாகவும், மதவாதத்தை தூண்டுவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தனியாக பதிலளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments