Subscribe Us

header ads

எம் சகோதரர்களால் பகிரப்படும் 'சூப் குடிக்கும் பெளத்த மதகுருமார்' என்ற வீடியோ.

சூப் குடிக்கும் பெளத்த மதகுருமார்* என்ற வீடியோ ,பேஸ்புக்கில் எம் முஸ்லிம் சகோதரர்களால் பகிரப்படுவது, இஸ்லாமியர்களின் ஒரு சிறந்த நடைமுறை இல்லை என்ற கண்டன தொனியில்  சகோ.  நூர்தீன்  அவர்களால் எழுதபட்ட கட்டுரை.

அண்மைக்காலமாக சில முஸ்லிம் சகோதரர்கள் பேஸ்புக் மூலமாக ஒரு விடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதில் பெளத்த மதகுரு போன்று உள்ள ஒருவர் மாட்டுக்கால் சூப் சுவைப்பது காணப்படுகின்றது. அந்த பெளத்த துறவி இனவாத நடவடிக்கைகளில் தொடர்பு உள்ளவராக அறிய முடியவில்லை. அப்படி இருக்கும் பொழுது இந்த  துறவி சூப் சுவைப்பதை குறை சொல்ல, இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு என்ன உரிமை உள்ளது?

சகோதரர்களே, இது நமக்கு தேவையில்லாத விடயமும், நம்மீது சாதாரண பெளத்தர்களின் காழ்ப்புணர்வை அதிகமாக்கும் விடயமும் கூட.

நமது மெளலவிமார் எல்லோரும் பத்தரைமாத்துத் தங்கங்களா என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். விபச்சாரம், சிறுவர் துஸ்பிரயோகம், ஸ்வீப் டிக்கட், சிகரட் என்று எத்தனை ஹராமான வேலைகளை பல மெளலவிமார் செய்கின்றனர். ஆகவே இதையெல்லாம் ஒரு விடயமாக எடுத்து அந்நிய மதத்தவர்களை சீண்டுவது சரியல்ல.

இவர் ஒன்றும் பாரிய குற்றங்களை செய்துவிடவில்லை.

நாம் சாதரணமாக செய்வதைத்தான் செய்கின்றார், ஆகவே இதனை நாம் பகிரங்கப் படுத்துவது, நமக்குத்தான் இழிவு.

மேலும், இத்தகைய விடியோக்களை பகிர்வது, பெளத்த மக்களை நம்மீது வெறுப்பு கொள்ள தூண்டுவதனையே நடைமுறையில் காண முடியுமாக உள்ளது.

இன்று சூப் சுவைக்கும் இவர், நாளை தனது மதம் பிழை, பூரணமானது இல்லை, நடைமுறைக்கு ஒவ்வாதது என்று உணர்ந்து இஸ்லாம்தான் சரி என்று முடிவெடுப்பதட்குக் கூட வாய்ப்பு உள்ளது, ஆனால் நாம் இப்படி பேஸ்புக்கில் போட்டு அவமானப் படுத்தினால்??

ஒரு வேளை இவர் சூப் குடிப்பது ஒரு முஸ்லிம் கடையாகக் கூட இருக்கலாம். அப்படியானால், ஒருவரின் அந்தரங்கம் பாதுகாக்கப் படாமல் முஸ்லிம் கடையில் விடியோ பண்ணப்ப்படுமானால், இதன் பிறகு முஸ்லிம்களை நம்புவார்களா? சிந்தித்து செயல்படுவோம்.


Post a Comment

0 Comments