(இர்ஷாத்)
புத்தளம் தப்போவ குளத்தில் குளிப்பதற்கு சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி
மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணமானவர் கருவெலகஸ்வௌ - புத்தி தியவர கிராமத்தை சேர்ந்த ஆனந்த (வயது 50) என்பவராவார்.
இச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மரணமானவரும்,அவரது
உறவினர் ஒருவருமே குளிக்கச் சென்றுள்ளனர். இருந்த போதும் மரணமான ஆனந்த
நீரில் மூழ்கிய வேளை அவருடன் சென்ற உறவினர் சத்தமிட்டுள்ளார் அவரை
மீட்பதற்கு பிரதேச மக்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு புத்தளம் தள
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவரது உயிரை காப்பாற்ற
முடியாமல் போயுள்ளது என கருவெலகஸ்வெ பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
0 Comments