Subscribe Us

தனக்கான சவப்பெட்டியையும் கொள்வனவு செய்தார் அமைச்சர் மேர்வின் சில்வா.

அமைச்சர் மேர்வின் சில்வா பொரல்லை மையவாடியில் தான் இறந்த பிறகு அடக்கம் செய்ய இடம் ஒன்றை தயார் செய்த செய்தி சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் இடம்பிடித்து இருந்தது அறிந்ததே.

அதேவேளை  அமைச்சர் மேர்வின் சில்வா தான் இறந்த பிறகு வைத்து அடக்கம் செய்யப்படும் சவப்பெட்டியையும் கொள்வனவு செய்துள்ளதாகவும் அப்பெட்டி மிகவும் உயர் தரமானதொன்றாக உள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பிட்ட பெட்டிக்கு அமைச்சர் முழு பணத்தையும் செலுத்தி கொள்வனவு செய்துள்ளதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments