Subscribe Us

தென் மாகாணம் ஐ.ம.சு.மு. வசமானது

தென் மாகாணசபைத் தேர்தலின் இறுதி முடிவுகள்.

இந்த தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தென் மாகாணசபையைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாக 699,408 வாக்குகளைப் பெற்று தென் மாகாணத்தில் 31 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மொத்தமாக 310,431 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 109,024 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி 75,532 வாக்குகளை மொத்தமாகப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments