Subscribe Us

header ads

19 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை

நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத்தேர்தல்களில் 19 இலட்சத்து 76 ஆயிரத்து 810 பேர் வாக்களிக்கவில்லை.

இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில்; வாக்களிப்பதற்கு 58 இலட்சத்து 98 ஆயிரத்து 428 பேர் தகுதிபெற்றிருந்தனர். அதில் 39 இலட்சத்து 21 ஆயிரத்து 612 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

அளிக்கப்பட்ட வாக்குகளில் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 11 வாக்குகள் செல்லுப்படியற்றதாகும்.

கடந்த முறை நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண சபைத்தேர்தல்களின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இம்முறை 247103 வாக்குகள் குறைந்துள்ளன. ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4700 வாக்குகள் அதிகரித்துள்ளன.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களின்; எண்ணிக்கையில் 17 குறைந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் 2 குறைந்துள்ளது.

இதேவேளை, தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட 1333 வேட்பாளர்கள் கட்டுப்பணமாக 26 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments