மாதம்பையில் நடந்தது என்ன?
14.02.2014 வெள்ளிக்கிழமை அன்று
மாதம்பையில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு
கருத்துக்களை ஊடகங்கள் மூலம் வெளியிட்டு வருவதைக் காண்கிறேன். இவர்களில்
மிகச் சிலரே உண்மைநிலையை அறிந்து கருத்து வெளியிடுகின்றனர். எனினும்
ஊடகங்கள் மூலம் ஒரு பொய்யை பலரும் சொல்லும் போது அது உண்மையாகி விடுவதைப்
போல ஒரு கதைதான் மாதம்பையிலும் நடைபெற்றிருக்கிறது.
மாதம்பையோடு திருமண உறவு மூலம்
தொடர்புபட்டவன் என்ற வகையிலும் மாதம்பை பள்ளிவாயலின் ஓர் அங்கத்தவன் என்ற
வகையிலும் உண்மை நிலையினை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
எனக்கும் ஸலபி
சிந்தனைக்குமிடையில் பெரும் தொடர்பிருக்கிறது. எமது பிரதேசத்தில் ஸலபி
சிந்தனையை வளர்த்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உரிமையோடு இதனை
எழுதுகிறேன்.
பெரும்பாலான இடங்களில் ஸலபி
சிந்தனையை சரிகண்டு ஏற்றுக் கொண்ட சகோதரர்கள் ஒண்றிணைந்து தமக்கான ஒரு
மஸ்ஜிதை உருவாக்குவதற்கு பிரதான காரணமாக அமைந்தது குறித்த ஊரில் காணப்பட்ட
தாய்ப்பள்ளி குர்ஆன் ஸுன்னாவுக்கு இசைவாக செயற்பட மறுத்ததே! பல
முயற்சிகளுக்குப் பின்னரே தமக்கென்று ஒரு மஸ்ஜிதை இவர்கள் உருவாக்கினர்.
(இது எல்லா இடங்களுக்கும் பொருந்தாது)
எனினும் மாதம்பையின் நிலை
அவ்வாறல்ல. நாட்டிலுள்ள எந்தப் பாரம்பரிய தாய்ப்பள்ளியோடு ஒப்பிட்டாலும்
மாதம்பைப் பள்ளிவாசல் குர்ஆன் ஸுன்னாவை மாத்திரம் செயற்படுத்த வேண்டும்
என்ற நோக்கில் செயற்படுகின்றது. எனவேதான் அப்பள்ளியின் வழக்கிலிருந்த
எத்தனையோ விடயங்களை அவை பிழை என்று ஆதாரபூர்வமாகத் தெரிந்தவுடன் நீக்கி
வந்திருக்கிறது.
எந்தளவெனில் மாதம்பையில் ஒரு தர்ஹா அமைந்திருந்தது. நாட்டில் இன்றுள்ள பிரபலமான தர்ஹாக்களுக்கு இணையாக இது காணப்பட்டது. இன்று அந்த ஸியாரத்தின் அடையாளங்கள் கூட இல்லை. தர்ஹாவை மட்டுமல்ல அதன் எல்லா அடையாளங்களையும், தடயங்களையும் முழுமையாக நீக்கியது இந்நாட்டில் மாதம்பை மட்டும்தான் என நினைக்கிறேன்.
எந்தளவெனில் மாதம்பையில் ஒரு தர்ஹா அமைந்திருந்தது. நாட்டில் இன்றுள்ள பிரபலமான தர்ஹாக்களுக்கு இணையாக இது காணப்பட்டது. இன்று அந்த ஸியாரத்தின் அடையாளங்கள் கூட இல்லை. தர்ஹாவை மட்டுமல்ல அதன் எல்லா அடையாளங்களையும், தடயங்களையும் முழுமையாக நீக்கியது இந்நாட்டில் மாதம்பை மட்டும்தான் என நினைக்கிறேன்.
இதுமட்டுமல்ல, அப்பள்ளியில் குனூத் இல்லை, கூட்டு துஆ இல்லை, கந்தூரி இல்லை, றமழான் 27 விஷேசமும் இல்லை… என கூறிக் கொண்டே போகலாம்.
இவை எல்லாம் அப்பள்ளியில் ஏலவே
நடைபெற்ற சிறப்பு அமல்களாக இருந்தன. இஸ்லாத்தில் இவ்வமல்களுக்கு எவ்வித
பெறுமதியும் இல்லை என்பதை ஊர் மக்களுக்கு தெளிவுபடுத்தி, அவர்களது முழு
விருப்பத்துடன், ஊர் இரண்டாகாது இரண்டு பள்ளிகள் உருவாகாது ஷிர்க்கையும்
பித்அத்களையயும் களைந்த பெருமை நான் அறிந்த வகையில் மாதம்பைக்கு மட்டுமே
உண்டு. இது மாற்றத்தை விரும்புகின்ற எல்லா முஸ்லிம் ஊர்களுக்கும் தஅவா
அமைப்புகளுக்கும் சிறந்த முன்மாதிரியாகும்.
அல்லாஹ்வின் அருளும் ஜமாஅத்தே இஸ்லாமியின் முயற்சியும் மாதம்பை மக்களின் மனோபாவமுமே இம்மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது எனலாம். ஏனைய முஸ்லிம் கிராமங்களோடு ஒப்பிடுகின்ற போது மாதம்பை ஆரோக்கியமான நிலையயிலேயே இருக்கிறது.
அல்லாஹ்வின் அருளும் ஜமாஅத்தே இஸ்லாமியின் முயற்சியும் மாதம்பை மக்களின் மனோபாவமுமே இம்மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது எனலாம். ஏனைய முஸ்லிம் கிராமங்களோடு ஒப்பிடுகின்ற போது மாதம்பை ஆரோக்கியமான நிலையயிலேயே இருக்கிறது.
இந்தப் பின்னனியில் இருந்து தான்
தற்போதைய நிலையை அவதானிக்க வேண்டும். SLTJ சிந்தனையால் கவரப்பட்ட சிலர்
(சுமார் 10 பேரளவில்) சுமார் 3 வருடங்களாக பள்ளிக்கு உத்தியோகபூர்வமாக
கடிதம் மூலம் (தமது தொழுகை சார்ந்த கடமைகளையும் பிற அமல்களையும் தனித்துச்
செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர பள்ளிவாயலை உருவாக்குதல்
சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை) அறிவித்துவிட்டு தனித்துச்
செயற்பட ஆரம்பித்தனர்.
இதனை பள்ளி நிருவாகமும், ஜமாஅத்தே
இஸ்லாமி மாதம்பைக் கிளையும், ஜம்இய்யதுத் தலபாவும், ஊர் மக்களும் நன்கு
அறிந்தே இருந்தனர். அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டதே அன்றி அவை
பெரும் கலவரமாக மாறவில்லை. கலகத்தைத் தூண்டுவதற்கென்றே போல் மிக உயர்த்தி
சப்தமாகப் போடப்பட்ட பயான்களால் ஊர்மக்கள் பல அசௌகரியங்களுக்கும்
உள்ளானார்கள். எனினும் அவர்களின் நல்ல பண்பினால்தான் இதுவரை SLTJ
சகோதரர்கள் பெரும் பிரச்சினைகளை அங்கு எதிர்கொள்ளாதிருந்தனர்.
அதுவரையில் அமைதியாக இருந்த
ஊர்மக்கள் ஏன் திடீரென 14.02.2014 வெள்ளியன்று கலகத்தில் ஈடுபட வேண்டும்?
மாதம்பை SLTJ சகோதரர்கள் தமது ஜும்ஆக் கடமையை நிறைவேற்றுவதற்காக ஏனைய
பிரதேசங்களுக்கே சென்று கொண்டிருந்தனர். தொடர்ந்தும் அவ்வாறு செல்வதை
சிரமமாகக் கருதி மாதம்பையில் தனியாக ஜும்ஆத் தொழுவதற்கு இடஏற்பாடு
செய்தனர்.
ஒரு சதுர கிலோமீட்டருக்கும்
குறைவான நிலப்பிரதேசத்தைக் கொண்ட மாதம்பையில் பல நூறு பேர் தொழுவதற்கான
இடவசதிகள் உள்ள பள்ளிவாயலில் இன்னொரு ஜும்ஆப் பள்ளிவாயல் உருவாகுவதை
ஊர்மக்கள் எவரும் விரும்பவில்லை. இதுவே பிரச்சினைக்கான மூலகாரணம்.
இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து
SLTJ சகோதரர்கள் ஜமாஅத்தே இஸ்லாமியையும் அதன் அமீரையும் எழுத்துக்களாலும்
வார்த்தைகளாலும் மிக மோசமாக திட்டித் தீர்த்திருக்கிறார்கள். எவ்வித
ஆதாரங்களையும் முன்வைக்காது வெறும் ஊகத்தின் அடிப்படையில் பலவாறு கருத்துத்
தெரிவித்திருப்பதானது எவ்வகையில் இஸ்லாமாகும்? SLTJ யின் பொறுப்பு வாய்ந்த
துணைச் செயலாளர் பதவியில் இருக்கும் சகோதரர் ரஸ்மின் தகவல்களை
உறுதிப்படுத்திக் கொள்ளாமல் ஊடக அறிக்கை விட்டிருக்கிறார். ஒரு செய்தியை
உறுதிப்படுத்திக் கொள்ளாமல் வெளியிடுவதற்கு குர்ஆனிலும் சுன்னாவிலும்
ஆதாரம் இருக்கிறதா? தான் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது எனத்
தெளிவாகத் தெரிந்ததன் பின்னரும் சொன்ன வார்த்தைகளை வாபஸ் வாங்காதிருப்பதும்
இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைதானா?
சகோதரர் ரஸ்மினுடன் தொலைபேசியில்
நான் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தனக்குக் கிடைத்த தகவல்களின் படியே
தான் அறிக்கை விட்டதாகவும் பின்னர் அது பிழையான தகவல் எனத்
தெரியவந்ததாகவும் குறிப்பிட்டார். பிழையைத் திருத்தி மீண்டும் ஊடகங்களில்
சொல்வதுவே பொருத்தமான செயலாக இருக்கும் என நான் கேட்டதற்கு தெளிவானதொரு
பதிலை அவர் தரவில்லை. மட்டுமல்ல சகோதரர் ரஸ்மினின் ஊடக அறிக்கையில் இன்னும்
பல விடயங்களைக் கூறுகிறார். அவை தொடர்பாகவும் அவரிடம் தொலைபேசியில்
கேட்டேன். அப்போதும் அவர் அவற்றை உறுதிப்படுத்தினார். எனினும் அவர்
உறுதிப்படுத்திக்கூறிய விடயங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்ட போது
சகோதரர் ரஸ்மினின் கூற்றுக்களை முழுமையாக மறுத்தனர். பொய்யான தகவல்களைப்
பரப்புவதற்கும் அதனை நிரூபிப்பதற்குமான கலையை எங்கிருந்து கற்றீர்கள்
சகோதரர் ரஸ்மின் அவர்களே! இதற்கும் குர்ஆனிலும் சுன்னாவிலும் ஆதாரம்
இருக்கிறதா?
ஜமாஅத்தே இஸ்லாமி
தலைமையகத்திலிருந்து ஒரு குழு வியாழன் பின்னேரம் மாதம்பைக்குச் சென்று
பள்ளி நிருவாகிகளோடும் ஜமாஅத் கிளை சூறா உறுப்பினர்களோடும் கலந்துரையாடி
SLTJ சகோதரர்கள் வெள்ளியன்று ஜும்ஆவை செய்தாலும் எவ்வித பிரச்சினைக்கும்
ஊர் மக்களைப் போக வேண்டாம் எனவும் அறிவுறுத்திய விடயத்தை அறிந்த நிலையிலும்
ஜமாஅதே இஸ்லாமி மீதும், பள்ளி நிருவாகிகள் மீதும் அபாண்டம் சுமத்துவது
எவ்வகையில் தகும்? சரளமான பேச்சாற்றலும் வாதத் திறமையும் உலகில் சிலபோது
உங்களை வெல்லச் செய்தாலும் உங்களது மறுமை நிலை குறித்து அஞ்சிக்
கொள்ளுங்கள்!
உதாரணத்திற்கு பேருவலையை
எடுத்துக் கொள்வோம்! அங்கு ஸலபி சிந்தனை சார்ந்த பள்ளிவாயலும் ஸலபி
சகோதரர்களும் தாக்கப்பட்ட போது பேருவலையில் உள்ள ஸலபி சிந்தனையை
சாராதவர்களும் கவலைப்பட்டார்கள். ஆனால் மாதம்பையில் அவர்களது வாடகைக்
கட்டடம் (அது மஸ்ஜிதும் அல்ல, அல்லாஹ்வுக்காக வக்ப் செய்யப்பட்ட பூமியும்
அல்ல) தாக்கப்பட்ட போது அவ்வூர் மக்கள் – ஜமாஅத்தே இஸ்லாமி சாராதோரும் –
கவலைப்படவில்லையே! இது ஏன்?
மாதம்பை ஊரின் மொத்த ஆண்கள்
சனத்தொகையில் 10% இற்கும் குறைவானவர்களே ஜமாஅத்தே இஸ்லாமி அங்கத்தவர்கள்.
பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் பொதுமக்களாக இருக்க எப்படி SLTJ
சகோதரர்கள் முழுமையாக ஜமாஅத்தே இஸ்லாமி மீது பழியை சுமத்துகின்றனர்?
சகோதரர் ரஸ்மினிடம் இப்படி ஒரு
கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். கடந்த மாதம் இதே மாதம்பை SLTJ சகோதரர்கள்
மாதம்பை பொலிஸ் நிலையத்தில் நாம்தாம் பள்ளி நிருவாகிகள் என பொய் சொல்லி
ஒரு விடயத்தை சாதிக்க முனைந்திருக்கின்றனர். அவ்வாறாயின் இச்செயலுக்கும்
SLTJ தலைமையகத்துக்கும் தொடர்பிருக்கிறது என்று நான் சொன்னால் அதனை ஏற்றுக்
கொள்வீர்களா? அல்லது அவர்களது இப்பண்பு கெட்ட செயலை வைத்து முழு SLTJ யும்
இப்படித்தான் (ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்) என நான் பட்டம்
சூட்டுவது ஒரு முஸ்லிமின் பண்பாகுமா?
யதார்த்தமும் உண்மை நிலையும்
இவ்வாறிருக்க பொய்யையும் அபாண்டத்தையும் மூலதனமாக்கி தஃவா செய்பவர்கள்
உலகில் எதனை சாதிக்க விரும்புகின்றனர்? மறுமையில் அவர்களின் நிலைதான்
எவ்வாறிருக்கும்? அல்லாஹ்வே! எமதும் அவர்களதும் பாவங்களை
மன்னித்தருள்வாயாக! உனது மார்க்கத்தை வாழ வைக்கும் பணியில் எமது வாழ்வை
அர்ப்பணிக்க அருள் புரிவாயாக!
0 Comments