Subscribe Us

header ads

நித்திரையில் கிடந்த பெண் சாம்பலாகி மரணம் (படங்கள் இணைப்பு)

அம்பாறையில் அக்கரைப்பற்றில், ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் யுவதி ஒருவர் தீயில் எரிந்து இறந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
 
தலைவர் வீதியைச் சேர்ந்த 22 வயது உடைய தங்கராசா திவ்வியா என்பவரே இறந்து உள்ளார்.
 
 இவர் காலையில் 9.00 மணிக்கு பின்னரே வழமையில் எழும்புவார் என்றும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு  அறையில் கதவை உள்ளே பூட்டி விட்டு யுவதி நித்திரையில் இருந்து உள்ளார் என்று தெரிகின்றது.
 
காலை 8.30 மணிக்கு தகப்பன் வேலைக்குச் சென்று உள்ளார். தாயார் அருகில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்று உள்ளார். 
 
9.00 மணி அளவில் வீட்டின் அறை தீப்பற்றி எரிவதை கண்ட தாயார் சத்தமிட்டார். அயலவர்கள் வந்து, தீயை தண்ணீர் ஊற்றி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அறையில் கட்டிலில் நித்திரையில் இருந்த யுவதி தீயில் எரிந்து சாம்பலாகி போனார்.
 
அலுமாரி, தளபாடங்கள், உடுப்புக்கள் உட்பட அறையில் இருந்த பொருட்கள் யாவும் முற்றாக எரிந்து விட்டன. அத்துடன் வீட்டின் கூரையின் ஒரு பகுதியும் தீப்பற்றி எரிந்து உள்ளது.
 
மின்சார ஒழுக்கு காரணமாக தீ ஏற்படவில்லை என்று பொலிஸார் நம்புகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


 

Post a Comment

0 Comments