Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி இவ்வருடமும் நடைபெற மாட்டாது

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) கிரிக்கெட் சுற்றுப்போட்டி இம்முறையும் நடைபெறமாட்டாது. அதற்குப் பதிலாக கடந்த வருடம் போன்று உள்ள10ர் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டிகளை நடத்துவதற்கான வர்த்தக பங்காளிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் தேடிக்கொள்ள முடியாமல் போயுள்ளதாகத் தெரியவருகின்றது.

2012; ஆம் ஆண்டு முதலாவது ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது. அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், பங்காதேஷ் முதலான வெளிநாட்டு வீரர்களும் இவ்வணிகளில் இடம்பெற்றனர். ஊவா நெக்ஸ்ட் அணி அச்சுற்றுப்போட்டியில் சம்பியனாகியது.

ஆனால் கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்றவிருந்த 8 அணிகளும் சுற்றுப்போட்டிக்கான தமது கொடுப்பனவையும் வீரர்களின் ஊதியத்துக்கான வங்கி உத்தரவாதத்தையும் உரிய கால அவகாசத்தில் அளிக்கத் தவறின.

இதனால் அச்சுற்றுப்போட்டி ஆரம்பிப்பதற்கு 3 வாரங்கள் இருந்த நிலையில் போட்டிகள் ரத்துச் செய்யப்படுவதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக 4 மாகாண அணிகளுக்கிiயிலான ஷசுப்பர் 4| சுற்றுப்போட்டி நடத்தப்பட்டு கந்துரட்ட மெரூன்ஸ் அணி  வெற்றிபெற்று சம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு தெரிவாகியது.

அதன்பின்னர்  சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சமர்செட் என்டர்டெய்ன்மன்ட் வென்சர்ஸ் (எஸ்.ஈ.வி.) நிறுவனத்துடன் இணைந்து லாபகரமான முறையில் இச்சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்யலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நம்பியிருந்தது. ஆனால் பல தடவை இடம்பெற்ற சந்திப்புகளின் பின்னரும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.

"7 அணிகளின் ஒப்பந்தங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து இச்சுற்றுப்போட்டியை மீள ஆரம்பிப்பதற்கு நாம் முயற்சித்தோம். ஆனால் எமது ஊக்குவிப்பு பங்காளர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அத்துடன் ஜூலை மாதம் தென்னாபிரிக்காவின் இலங்கை விஜயம், இலங்கை ஏ  அணியின் இங்கிலாந்து விஜயம் ஆகிய இடம்பெறவுள்ளதால் எஸ்.எல்.பி.எல். போட்டிகளை  நடத்துவதற்கான கால அவகாசமும் இல்லை" என எஸ்.எல்.பி.எல். பணிப்பாளர் அஜித் ஜயசேக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments