சீனாவில் இரவு நேரங்களில் அதிக அளவில் தொடர்ந்து “ஸ்மார்ட் போன்” பார்த்து வந்த பெண்ணின் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
கணனி, கையடக்க போன், ஸ்மார்ட் போன், டேப்லட் ஆகியவை இன்று பெரியவர்களை
மட்டுமின்றி சிறியவர்களையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினரும்,
குழந்தைகளும் இரவில் இருட்டில் கூட இவற்றை விளையாடுவதற்குப் பயன்படுத்தி
வருகின்றனர்.
சீனாவில் இப்படித்தான் லியூ என்ற பெண் ஒரு நாளைக்கு தொடர்ந்து 2 முதல் 3
மணி நேரம் வரை இரவில் ஸ்மார்ட் போனில் விளையாடி வந்தார். இதைத் தொடர்ந்து
இவரது வலது கண்ணின் பார்வை சிறிது, சிறிதாக மங்கி, பார்வை இழப்பு
ஏற்பட்டது. “”லியூ இரவு நேரங்களில் தொடர்ந்து ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி
வந்ததால், அவருடைய வலது கண்ணின் விழித்திரையின் ஒரு பகுதி
பாதிக்கப்பட்டுள்ளது” என்று இவரைப் பரிசோதித்த வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.

0 Comments