உத்தரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும்
17வயது மாணவன் ஒருவன், 50 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக
கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்டைச் சேர்ந்த 17 வயது மாணவன் பொலிசாரிடம் மனு ஒன்றை அளித்துள்ளான்.
அதில், நான் 50 வயதாகும் பெண் ஒருவரை காதலிக்கிறேன். அவருடன் ஆறு
மாதங்களாக நெருங்கிப் பழகி வருகிறேன். அவரையே மணக்க விரும்புகிறேன்.
அதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் எனவே எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறியுள்ளான்.
மனுவை படித்து அதிர்ச்சியடைந்த பொலிசார், எட்டு குழந்தைகளுக்கு தாயான
அப்பெண்ணை அழைத்து விசாரித்ததில் வாழ்ந்தால் இவரோடு தான்
வாழ்வேன், இல்லையென்றால் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என்று
கூறியுள்ளார்.
ஆனால் அந்தப் பள்ளி மாணவனுக்கு திருமண வயது ஆகாததால் அவனை மறந்துவிடு
என்று பொலிசார் அப்பெண்ணிடம் அறிவுரை கூறியுள்ளனர். எனினும் அதை ஏற்றுக்
கொள்ளாத அப்பெண், கோபத்தில் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
திருமண வயதாகும் வரை காத்திருப்போம் என கூறியுள்ள காதலர்களுக்கு பொலிசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
0 Comments