புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அலுவலக
புகையிரதத்தில் இருந்து பயணிகளிருந்த ஒரு பெட்டி கழன்றுள்ளது. இச்சம்பவம்
மாதம்பை மற்றும் காக்கபள்ளிய புகையிரத நிலையங்களுக்கு இடையில்
இடம்பெற்றுள்ளது.பெட்டி கழன்ற பின்னரும் 10 பெட்டிகளுடன் புகையிரதம் 300 மீற்றர்வரை சென்றுள்ளது.
பின்னர் கழன்ற பெட்டியை இணைத்துக்கொண்டு குறித்த புகையிரதம் தனது பயணத்தை தொடர்ந்தது.

0 Comments