Subscribe Us

header ads

பிரபாகரனே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாகக் கூறுவது வேடிக்கையானது

நாட்டின் இன்­றைய சர்­வா­தி­கார போக்­கு­ட­னான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங்களுக்கு மத்­தியில் வாழ்க்­கையை கொண்டு செல்லும் அதே­வேளை ராஜபக் ஷ குடும்­பத்தினர் அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் அனு­ப­வித்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனே இந்­நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்­ற­தாக கூறு­வது வேடிக்­கைக்­கு­ரிய விட­ய­மாகும் என முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும், ஜன­நா­யக கட்­சியின் தலை­வ­ரு­மான சரத் பொன்­சேகா குற்­றஞ்­சாட்­டினார். 
 
இவ்­வ­ர­சினால் எங்­க­ளு­டைய போராட்­டங்­களை தடை செய்ய முடி­யாது. நாங்கள் எதற்கும் அஞ்­சியவர்­க­ளில்லை. அர­சாங்கம் எங்கள் மீது எவ்­வ­கையில் தடை விதித்­தாலும் நாங்கள் அப்­பாவி மக்­க­ளுக்­காக தொடர்ந்து போரா­டுவோம். அதே­போன்று எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் பெரு­ம­ள­வி­லான வாக்­கு­களை பெற்று வெற்­றி­கொண்டு நாட்டின் முன்­னணி கட்­சி­யாக பரி­ண­மிப்போம் எனவும் அவர் கூறினார். அர­சுக்கு எதி­ராக நேற்று முன்தினம் ஜன­நா­யகக் கட்சி ஏற்­பாடு செய்த ஆர்ப்­பாட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
 
தற்­போது இந்­நாட்டை ஆட்சி செய்யும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­யினால் ஊழல், மோசடி அதி­க­ரித்துள்ளதுடன் கசினோ சூதாட்­டத்தை .கொண்­டு­வந்து கலா­சா­ரத்தை சீர­ழி­வுக்குள் தள்­ளி­யுள்­ளது. அதே­போன்று சர்­வா­தி­கார போக்­குடன் இந்­நாட்டை ஆட்சி செய்கிறது. இவ்­வ­ரசின் சர்­வா­தி­கார போக்­கிற்கு இட­ம­ளிக்கக் கூடாது.
 
இதே­வேளை, தற்­போது மக்­களால் நிம்­ம­தி­யாக வாழ்க்­கை­யை­கொண்டு செல்ல முடி­யாது. பல வரு­டங்­க­ளாக கொழும்பில் வாழும் மக்கள் சிறிய வீடு­க­ளி­லேயே வசித்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய வீடு­களை அரசு வழங்­காமல் அவர்­க­ளு­டைய வீடு­களை உடைத்து அவ் இடங்­களை அர­சாங்கம் சுவி­க­ரித்து வரு­கி­றது.அத்­துடன், இந்­நாட்டு மக்கள் தொடர்பில் எவ்­வித சிந்­த­னையும் அர­சிற்கு கிடை­யாது.
 
கல்வி மற்றும் போக்­கு­வ­ரத்­திற்கு போதி­ய­ளவில் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தில்லை. இந்­நி­லையில் அர­சாங்கம் பொய் வாக்­கு­று­தி­களை வழங்கி பொய்மை மிகு ஆசி­யாவின் ஆச்­ச­ரி­ய­மாக இலங்­கையை மாற்­றி­யுள்­ளது. தற்­போது மக்­க­ளுக்கு மூவே­ளைகள் சாப்­பிட முடி­யாது. ஒரு வேளை உண­வையே மூவே­ளையும் உண்­ணு­கின்­றனர். நமது மூதா­தை­யர்­களை விடவும் உணவு உட்­கொள்ள வழி­யின்றி மக்கள் தவிக்­கின்­றனர். இவ்­வ­ரசு ஐந்து தலை­மு­றை­யி­னரை கட­னா­ளி­யாக மாற்­றி­யுள்­ளது.
 
வெளி­நா­டு­க­ளு­டானான உறவு
 
தற்­போது அர­சாங்கம் சர்­வ­தே­சத்தின் வல்­ல­ரசு நாடு­க­ளுடன் நட்­பு­றவை கொள்­ளமால் சர்­வா­தி­கார ஆட்­சி­க­ளை­யு­டைய நாடு­க­ளு­டனே நட்­பு­றவு கொள்­கி­றது. இதனால் தற்­போது நாடு பெரும் வலைக்குள் சிக்­கி­யுள்­ளது.
 
அரச ஊட­கங்­களின் குற்­றச்­சாட்­டுக்கள்
 
இதே­வேளை, பிர­தான எதிர்க்­கட்­சிகள் மீது குற்­றங்­களை சுமத்­தாமல் அரச ஊட­கங்கள் ஜன­நா­யக கட்­சியின் மீதே குற்­றங்­களை சுமத்­தி­வ­ரு­கின்­றன.
 
கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு பிர­பா­க­ர­னு­டைய மயி­ரி­ழைக்கு கூட இவ்­வாட்சி யாளர்கள் தகு­தி­யற்­ற­வர்க.ௌன கூறி­ய­மைக்கு அரச ஊட­கங்கள் என்னை தேசத்­து­ரோகி என பெயர் சூட்­டி­யுள்­ளன. நான் மனச்­சாட்­சிக்கு உடன்­ப­டவே கூறு­கிறேன்.
 
இந்­நாட்டில் விடு­தலை புலி­களின் தலைவர் பிர­பா­கரன் பொது மக்­களை இலக்­காக வைத்தே தாக்­கு­தல்கள் மேற்­கொண்டார். பிர­பா­கரன் இந்­நாட்டை சீர­ழித்­ததை விடவும் இவ்­வ­ர­சாங்கம் மக்­களை பெரும் கஷ்­டத்­திற்குள் தள்­ளி­யுள்­ளது.
 
அத்­துடன், 2009ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பிர­பாக ரனுக்கு 500 மில்லியன் ரூபாவை வழங்­கி­யது யார்? இவ்­வ­ர­சாங்க மாகும்.
 
தற்­போது தீவி­ர­வா­திகள் அனை­வரும் அமைச்­சர வையி­லேயே உள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உப­த­லைமைப் பத­வியை பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு வழங்­கி­யது யார்? இவ்­வ­ர­சாங்­க­மே­யாகும்.
 
ஆகவே, இவ்­வ­ர­சாங்கம் எங்­களுக்கு எவ்­வ­கையில் தடை விதித்­தாலும் எங்­க­ளு­டைய போராட்­டங்­களை நாம் நிறுத்­த­மாட்டோம். எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் பெரு ­ம­ளவில் வெற்றி பெற்று நாட்டின் முன்னணி கட்சியாக பரிணமிப்போம் என்றார்.

Post a Comment

0 Comments