Subscribe Us

header ads

நாட்டின் பலப் பகுதிகளில் விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கல் விழா

நாட்டின் பலப் பகுதிகளிலும் தை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மலையகத்தில் இன்று தை பொங்கல் பண்டிகையை மக்கள் வெகுவிமர்சியாக கொண்டாடிகின்றார்கள். 
 
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையே பொங்கல் பண்டிகையாகும். இதனை முன்னிட்டு இன்று அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் சிவஸ்ரீ.ரவிந்திர குருக்கள் தலைமையில் அதிகாலை காலை 5.20 மணியளவில் சூரிய பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றன. இதில் பல பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுப்பட்டனர். 


 
நீர்கொழும்பில் தைப் பொங்கல்
 
தைப்பொங்கல் தினத்தையிட்டு இன்று நீர்கொழும்பு நகரில் உள்ள கோயில்களில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில்; பிரதம குருவான குகேஷ்வர குருக்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டார்.





மன்னாரில் தை பொங்கல் தின நிகழ்வுகள்

தைத்திருநாளை முன்னிட்டு இன்று மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் பொங்கல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
 
இதன் அடிப்படையில் மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவாச்சாரியார் பாலசுப்பிரமணியம் மற்றும் கோவிலின் பிரதம குரு கிருஸ்ணன் ஆகியோர் இணைந்து பொங்கல் பொங்கி விசேட பூஜைகளை நடத்தியிருந்தனர்;.
 
இதேவேளை மன்னார் புனித. செபஸ்த்தியார் பேராலயத்திலும் பொங்கல் பொங்கி விசேட மத  வழிபாடுகள் இடம்பெற்றன.






Post a Comment

0 Comments