
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தமது மீலாத்துன் நபி விழா வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் ஆண்டுக் குறிப்பேட்டிலுள்ள
இந்த முக்கிய விழாவினை அவர்கள் உலகெங்கிலுமுள்ள தமது சகோதரர்களுடன் இணைந்து
கொண்டாடுகிறார்கள்.
இவ்வருட தேசிய மீலாதுன் நபி விழா
இலங்கையில் பெருமளவு பண்டைய முஸ்லிம் குடியேற்றங்களைக் கொண்டுள்ள களுத்துறை
மாவட்டத்தில் பேருவளையில் நடைபெறுகிறது.
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைகள்,
மக்கள் மத்தியிலான மோதல்களையும் இனரீதியான, சமய ரீதியான, குலரீதியான
மோதல்களையும் தவிர்ப்பதற்கான ஒரு பெறுமதியான அடிப்படையை வழங்கி,
உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணக்கச்
செய்தியைக் கொண்டுவருகிறது.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் முஹம்மத் நபி
(ஸல்) அவர்களின் போதனைகளுக்கேற்ப ஏனைய எல்லா சமூகங்களுடனும் சமாதானமாகவும்
சகோதரத்துவமாகவும் வாழ்ந்துவருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டில் சமாதானம் நிலவும் இன்றைய சூழலில் அவர்கள் தமது கலாசார
அடையாளத்துடன் சுதந்திரமாக வாழும் சூழலைப் பெற்றுள்ளனர்.
இந்த விசேட விழாவை முன்னிட்டு
நாடெங்கிலும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும் இன்றைய தினம் முஹம்மத் நபி
(ஸல்) அவர்களின் போதனைகளிலிருந்து கிடைத்த ஐக்கியம், சகிப்புத்தன்மை,
மக்கள் மத்தியிலான அன்பு ஆகியவற்றுக்கான தேவை குறித்த சிந்தனையை
வழங்குவதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும்.
இந்த மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு
நடைபெறும் எல்லா கொண்டாட்டங்களும் எமது தாய் நாட்டில் சமாதானத்தையும்
நல்லிணக் கத்தையும் பரப்பி முழுமையாக வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனறும்
ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
0 Comments