Subscribe Us

header ads

31 வருடங்களாக கோமாநிலையில் இருந்த நபர் மரணம் (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் 7 வயதில் விபத்துக்குள்ளாகி 31 வருடங்களாக கோமா நிலையில் இருந்த நபர் ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார்.  

கலிபோனியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 1982 ஆம் ஆண்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டபோது அவர்களின்  வாகனம் மற்றொரு வாகனத்துடன் விபத்துள்ளானதில் அப்போது 7 வயதான போல் கோர்ட்டஸ் படுகாயமடைந்தார். 

இதனால் மைக் போல் கோர்ட்ஸ் கடந்த 31 வருடங்களாக கோமா நிலையில் இருந்தார். மது போதையில் இருந்த சாரதியொருவரால் செலுத்தப்பட்ட வாகனமே போல் கோர்டஸின் குடும்பத்தினரின் வாகனத்தின் மீது மோதியது.

அதனால் ஆபத்தான வகையில் வாகனம் செலுத்தப்படுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மைக் போல் கோமா நிலையில் இருந்தபோது அவர் பல்வேறு பாடசாலைகளுக்கு  பெற்றோhல் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments