Subscribe Us

header ads

முகவரியுடன் குப்பையை போட்ட நபர்

சுவிட்சர்லாந்தில் பிளாஸ்டிக்கை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக
நபர் ஒருவருக்கு 2 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சுவிஸின் வாயூத் பகுதியில் மறுசுழற்சி விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பெட்ரிக் டியூபோர்(57) என்பவர் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அவரின் முகவரியுடன் கூடிய கவர்கள் மற்றும் காகிதங்கள் அடங்கிய பை ஒன்றினை குப்பை தொட்டியில் போட இடமில்லாததால் மறுசுழற்ச்சிக்கு அனுப்ப வேண்டிய பையில் போட்டு விட்டார்.

இதையறிந்த பொது பணித்துறை அவரின் முகவரிக்கு தொடர்பு கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் 250 பிராங்குகள் அபராதம் செலுத்தவேண்டும் அல்லது 2 நாள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பெட்ரிக் டியூபோர் கூறுகையில், என்னுடைய பெயர், முகவரியை வேண்டுமென வெளிட நான் ஒன்றும் பைத்தியம் இல்லை என்றும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments