ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது 68 ஆவது பிறந்த தினத்தை இன்று வரலா
ற்று முக்கியத்துவமிக்க இலங்கைக்கு கெளரவத்தை கொண்டு வந்த
பொதுநலவாய மாநாடு நடைபெற்று முடிந்த அடுத்த தினத்தில்
கொண்டாடுகின்றார்.
இன்றைய தினத்தில் ஜனாதிபதி களனி ரஜமஹா விகாரையில் பூஜை
வழிபாடுகளில் கலந்து கொள்வதோடு ஜனாதிபதிக்கு இறை ஆசி வேண்டி
கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பெளத்த
விகாரைகளிலும் இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம்
பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதோடு மரம் நடுகை இரத்ததான நிகழ்வுகள் உட்பட
பல்வேறு மக்கள் நல சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு தெற்கு, மலையகம், வடக்கு, கிழக்கு என நாட்டின் பல்வேறு
பிரதேசங்களிலும் ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு விசேட
வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தென்னிலங்கையின் வீரகெட்டியாவில் 1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம்
திகதி ஆறு சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில்
இரண்டாமவராக பிறந்தவரே மஹிந்த ராஜபக் ஷ ஆவார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் புகழ்பூத்த கொள்கையுடன் அரசியலில்
ஈடுபட்டு வந்த அரசியல் செல்வாக்கு மிக்க டி.ஏ ராஜபக் ஷவின்
இரண்டாவது பிள்ளையாக பிறந்த ஜனாதிபதி 1970 களில் இளம் வயதில் இலங்கை
பாராளுமன்றத்தில் பிரவேசித்தார்.
2005ஆம் ஆண்டு முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு
5ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பின்னர் 2010ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலிலும் அமோக வெற்றியை பெற்றார்.
பிரதமராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சி
தலைவராகவும் அமைச்சராகவும் பதவி வகித்து மக்கள் சேவை மூலம்
படிப்படியாக அரசியலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற
பதவியின் உச்சத்திற்கே சென்றவர்.
அது மட்டுமல்லாது இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்
காட்டியதோடு 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு வருடங்களுக்கான பொதுநலவாய
நாடுகள் அமைப்பின் தலைவராகவும் தெரிவாகியுள்ளார்.
0 Comments