Subscribe Us

ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்குள் பந்தை அடித்த டைகர் வூட்ஸ்

உலகின் முதல் நிலை கோல்வ் வீர­ரான டைகர் வூட்ஸ், ஐரோப்­பிய கண்­டத்­தி­லி­ருந்து அடித்த கோல்வ் பந்­தொன்று ஆசிய கண்­டத்­துக்குள் வந்து விழுந்­தது.


இது ஜோக் அல்ல. உண்­மை­யா­கவே நேற்று முன்­தினம் ஐரோப்­பிய கண்­டத்­தி­லி­ருந்து ஆசிய கண்­டத்­துக்கு பந்தை அடித்தார் டைகர் வூட்ஸ்.


ஐரோப்­பா­வு­டனும் ஆசி­யா­வு­டனும் எல்­லை­களைக் கொண்ட நாடாக துருக்கி
விளங்­கு­கி­றது. அங்­குள்ள ''பொஸ்­பரஸ் பாலம்'' இரு கண்­டங்­க­ளையும் இணைக்­கி­றது. 1560 மீற்றர் நீள­மான இப்­பா­லத்தின் ஐரோப்­பிய பகு­தி­யி­லி­ருந்தே ஆசிய கண்­டத்துப் பகு­திக்குள் கோல்வ் பந்தை அடித்தார் டைகர் வூட்ஸ்.

 இன்று ஆரம்­ப­மாகும் துருக்கி பகி­ரங்க கோல்வ் போட்­டி­க­ளுக்­கான ஊக்­கு­விப்­பாக இந்­நி­கழ்வு நடை­பெற்­றது. இதற்­காக பாலத்தின் மீது அமைக்­கப்­பட்­டி­ருந்த விசேட கோல்வ் மேடை­யி­லி­ருந்து டைகர் வூட்ஸ் பந்தை அடித்தார். மிகப் பர­ப­ரப்­பான இப் பாலத்தின் ஒரு பகுதி, இந்­நி­கழ்­வுக்­காக  28 நிமி­டங்கள் மூடப்­பட்­டி­ருந்­தன.


37 வய­தான டைகர் வூட்ஸ், துருக்கி பகி­ரங்க கோல்வ் போட்­டி­களில்
பங்­கு­பற்­று­வ­தற்­காக 30 லட்சம் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments