கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவையை நிறுத்த இந்தியாவில் ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதியுடன் கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த
விமான சேவைகளை நிறுத்திக் கொள்ளவிருப்பதாக, ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம்
அறிவித்துள்ளது.
அதற்குப் பிந்திய நாட்களில் முன்பதிவு செய்து கொண்டவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
சென்னை- கொழும்பு இடையில், குறைந்த கட்டண விமான சேவையை ஜெட் எயர்வேய்ஸ்
நிறுவனம் நடத்தி வந்தது. இந்நிலையில் போதிய இலாபமின்மையை காரணம் காட்டி
இந்த சேவையை ஜெட் எயர்வேய்ஸ் நிறுத்தியுள்ளது.


0 Comments