Subscribe Us

வரவு -செலவுத் திட்ட உரை ஆரம்பம்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணின் அர­சாங்­கத்தின் 2014ஆம் ஆண்­டிற்­கான வரவு -செலவுத் திட்­டத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சற்றுமுன் சபையில் சமர்ப்­பித்து உரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்.
 
ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான 8ஆவது வரவு -செல­வுத்­திட்­டமே  இன்று நிதி­ய­மைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்துள்ளார்.
 
*நாம் மாகாண சபை தேர்தலை நடத்தி இலங்கையில் ஜனநாயகம் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறோம்.
 
* பொதுநலவாய மாநாட்டின் வெற்றி வெளிநாடுகள் நமக்குக் கொடுத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
 
*மகிந்த சிந்தனை மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.
 
*நாம் மாகாண சபை தேர்தலை நடத்தி இலங்கையில் ஜனநாயகம் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறோம்.
 
*எங்களுடைய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது.
 
*நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாகும்.
 
*கிராமிய மட்டத்தில் தொழில்புரியும் அரச உத்தியோகத்தர்கள் சிரமத்தின் மத்தியில் முன்னேற்றத்துக்காக உழைக்கிறார்கள்.
 
*அரச வங்கிகளை ஒருபோதும் தனியார் மயப்படுத்த மாட்டேன் - ஜனாதிபதி உரை.
 
*நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீர்வழங்கல் திட்டங்களுக்காக 300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
 
*நாட்டை மீட்பதற்கும் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய மக்களின் புனர்வாழ்வுக்கும் அரச வருமானம் செலவிடப்பட்டது.
 
*பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்பதற்கும் மீள்குடியேற்றத்துக்கும் மீள்குடியேறிய மக்களின் புனர்வாழ்வுக்கும் அரச வருமானம் செலவிடப்பட்டது.
 
*மதுபானம், சிகரட் மீதான அரச வரி வருமானம் குறைவடைந்துள்ளது.
 
வடக்கு கிழக்கில் பின்தங்கிய பிரதேசங்களில் நீர்வழங்கல், மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு 14 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
 
*ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கியுள்ளோம்.
 
*25% ஆக உள்ள தொலைத்தொடர்பு வரியில் மாற்றம் ஏற்படுத்தப்படாது.
 
*கடந்த காலங்களில் சுனாமி மற்றும் யுத்தம் ஆகியவற்றின்போது வெளிநாடுகள் நமக்கு பெரும் உதவி செய்துள்ளன.
 
*1557 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது.
 
*63 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம்.
 
*2014 ஆம் ஆண்டு முதல் விவசாய ஓய்வூதிய திட்டத்தை செயற்படுத்த வேண்டும். இதற்காக அரசாங்கம் 1000 மில்லியன் ரூபாவை முதலாக வழங்குகின்றது.
 
*வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் மற்றும் மின்சார நடவடிக்கைகளுக்கு 1400 மில்லியன் ரூபா.
 
*மீன் உற்பத்தியை அதிகரிப்பதனூடாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
 
*மிருக வைத்தியர்களுக்காக 7500 மாதாந்த கொடுப்பனவு

Post a Comment

0 Comments