பண்டாரவளையிலிருந்து பூனாகலை
நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்
வண்டியொன்று 300 அடி பள்ள த்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11
பேர் உயிரிழந்ததுடன், மேலும் 19 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாரிய விப த்து சம்பவம் நேற்று மாலை 6.40 மணியளவில்
பண்டாரவளைக்கும் பூனாகலைக்கும் இடைப்பட்ட மாபிட்டிய என்ற இடத்தில்
இடம்பெற்றதாக பண்டாரவளை பகுதிக்கு பொறுப் பான பொலிஸ் அத்தியட்சர்
புத்திக சிறிவர்தன தெரிவித்தார். மேலும் காயமடைந்த பலரின் நிலைமை
கவலை க்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை தொடர்வதால் மீட்புப்பணிகள்
பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படுவதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நேற்றை யதினம் மாலை பண்டாரவளையிலிருந்து 40 க்கும் மேற்பட்ட
பயணிகளோடு பூனாகலையை நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு
சொந்தமான பஸ் வண்டியொன்று பயணித்துள்ளது. குறித்த பஸ் வண்டியானது
மாபிட்டிய பிரதேசத்தை அண்மித்த போது பாதையை விட்டு விலகி சுமார் 300
அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. குறித்த பிரதேசத்தில் சீரற்ற காலநிலை
தொடர்வதால் விபத்துக்குள்ளான பஸ் வண்டியிலிருந்து உடனடியாக
காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில்
மீட்புப் பணியாளர்கள் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். எனினும்
விபத்தையடுத்து உடனடியாக ஸ்தலத்திற்கு பொலிஸார் விரைந்த நிலையில்
மீட்புப்பணிகளுக்காக இராணுவம், தீயணைப்புப் படையினைரையும்
சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். இதனையடுத்து பொதுமக்களின்
துணையுடன் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் காயமடைந்தவர்கள்
தியத்தலாவை, பண்டாரவளை வைத்தியசாலைகளில் உடனடியாக
அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 பேரில்
ஒருவரின் நிலை கவலை க்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு
மேலதிகமாக மேலும் ஒருவர் பண்டாரவளை வைத்தியசாலையிலும் 6 பேர்
பதுளை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிறு
காயங்களுக்குள்ளான சிலர் வைத்தியசாலையில் சிகிச்சைகளை
பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
இதேவேளை சம்பவம் தொட ர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சா ளர் சிரேஷ்ட பொலிஸ் அத்திய ட் சர் அஜித் ரோகண தகவல் தருகை யில்,
சீரற்ற காலநிலை மற்றும் விபத்தின் பாரதூரம் ஆகியவற்றை
கருத்திற்கொண்டு மீட்புப்பணிகளுக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு
பெற்றுக்கொள்ளப்பட்டது. பஸ் வண்டி வீழ்ந்து விபத்துக்குள்ளான
பள்ளத்தில் தொடர்ந்தும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
காயமடைந்தவர்கள் எவரேனும் அப்பள்ளத்தில் கிடக்கின்றனரா என்பது
தொ டர்பில் தேடுதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பகின்றன என்றார்.
இதேவேளை சம்பவ இடத்துக்கு சென்ற ஊவா மாகாண அமைச்சர் செந்தில்
தொண்டமான் மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் வகையில் பொலிஸ் இராணுவம்
தீயணைப்பு பிரிவு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு நடவடிக்கைளை
மேற்கொண்டிருந்தார். அத்துடன் காயமடைந்தவர்கள்
அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகளுக்கு சென்று
பார்வையிட்டதுடன் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும்
மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.


0 Comments