(ரொபட் அன்டனி )
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
அதி
கரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 102805 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 27.9 வீத அதிகரிப்பைக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80379 ஆகப் பதிவுசெய்யப்பட்டது.
இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு 89761 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 904015 சுற்றுலாப் பயணிகள் உலக நாடுகளிலிருந்து வரு கைதந்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 774151 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்திருந்தனர். அந்தவகையில் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் வரையான காலப்பகுதியையும் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரையான காலப்பகுதியையும் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 16.8 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். அந்தவகையில் இவ்வருடம் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்தே வேலைத்திட்டங் கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிக ளை இலங்கைக்கு வரவழைப்பதே அரசாங்கத்தின் இலக்காக அமைந்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இதுவரை இந்தியாவின் பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் சுற்றுலா ஊக்குவிப்பு மெகா பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் சீனாவின் பீஜிங் நகரிலும் மெகா சுற்றுலா ஊக்குவிப்புப் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இலங்கைக்கு அதிகளவில் இதுவரை இந்தியாவிலிருந்தே சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 151896 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 30512 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு பிரிட்டனிலிருந்து 100089 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் பிரிட்டனிலிருந்து 9375 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் அதிகளவில் ஜேர்மனியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். ஜேர்மனியிலிருந்து கடந்த 10 மாதங்களில் 66762 சுற்றுலாப் பயணிகள் இல ங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஜேர்மனியிலிருந்து மட்டும் 6812 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக பிரான்ஸ், மாலைதீவு, அவு ஸ்திரேலியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். சீனாவிலிருந்து இவ்வருடத்தில் இதுவரை 34951 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். குறிப்பாக கடந்த ஒக்டோபர் மாத த்தில் 5798 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்து ள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதத்தில் 2200 சுற்றுலாப் பயணிகளே சீனாவிலிருந்து வந்திருந்தனர். அந்தவகையில் நோக்கும் போது ஒரு மாதத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 102805 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 27.9 வீத அதிகரிப்பைக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80379 ஆகப் பதிவுசெய்யப்பட்டது.
இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு 89761 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 904015 சுற்றுலாப் பயணிகள் உலக நாடுகளிலிருந்து வரு கைதந்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 774151 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்திருந்தனர். அந்தவகையில் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் வரையான காலப்பகுதியையும் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரையான காலப்பகுதியையும் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 16.8 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். அந்தவகையில் இவ்வருடம் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்தே வேலைத்திட்டங் கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிக ளை இலங்கைக்கு வரவழைப்பதே அரசாங்கத்தின் இலக்காக அமைந்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இதுவரை இந்தியாவின் பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் சுற்றுலா ஊக்குவிப்பு மெகா பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் சீனாவின் பீஜிங் நகரிலும் மெகா சுற்றுலா ஊக்குவிப்புப் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இலங்கைக்கு அதிகளவில் இதுவரை இந்தியாவிலிருந்தே சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 151896 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 30512 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு பிரிட்டனிலிருந்து 100089 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் பிரிட்டனிலிருந்து 9375 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் அதிகளவில் ஜேர்மனியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். ஜேர்மனியிலிருந்து கடந்த 10 மாதங்களில் 66762 சுற்றுலாப் பயணிகள் இல ங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஜேர்மனியிலிருந்து மட்டும் 6812 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக பிரான்ஸ், மாலைதீவு, அவு ஸ்திரேலியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். சீனாவிலிருந்து இவ்வருடத்தில் இதுவரை 34951 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். குறிப்பாக கடந்த ஒக்டோபர் மாத த்தில் 5798 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்து ள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதத்தில் 2200 சுற்றுலாப் பயணிகளே சீனாவிலிருந்து வந்திருந்தனர். அந்தவகையில் நோக்கும் போது ஒரு மாதத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments