1272 : மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவரின் மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னரானார்.
1791 : நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான்.
1877 : ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் அல்வா எடிசன் அறிவித்தார்.
1894 : சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
1905 : ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
1920 : அயர்லாந்தில் கால்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1962 : சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
1963 : இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை ஏவப்பட்டது.
1969 : ஓக்கினாவா தீவை 1972 இல் ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு
சாட்டோவுக்கும் இடையில் ெவாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
சாட்டோவுக்கும் இடையில் ெவாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1974 : இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின்
குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1980 : அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.
1996 : புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
2002: பல்கேரியா, எஸ்டோனியா, லத்வியா, லித்துவேனியா, ருமேனியா,
ஸ்லோவாக்கியாஇ ஸ்லோவேனி ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தன.
ஸ்லோவாக்கியாஇ ஸ்லோவேனி ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தன.
2004 : டொமினிக்கா தீவில் இடம்பெற்ற பூம்பகம் காரணாமக போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதம் ஏற்பட்டது.
2004: ஈராக் செலுத்த வேண்டிய சுமார் 100 பில்லியன் டொலர் கடன் தொகையை இரத்துச் செய்வதாக பாரிஸ் கழகம் எனும் அமைப்பைச் சேர்ந்த 19 நாடுகள் அறிவித்தன.
2009: சீனாவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 108 பேர் உயிரிழந்தனர்.


0 Comments