தோஹா கட்டார் இராச்சியத்துக்கு அழைப்பித்து திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பேஸ்புக் மூலம் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்டு 3, 37500 ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கொழும்பு, கொள்ளுப்பிட்டி அந்தோனியார் மாவத்தையைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததைகவனத்திற்கொண்டு நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
முறைப்பாட்டாளர் தமது கைத்தொலைபேசியில் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தபோது தோஹா கட்டார் ராச்சியத்தில் மரத்தளபாட நிறுவனமொன்றின் முகாமையாளர் எனக் கூறிக் கொண்ட நபருடன் அறிமுகம் ஏற்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரிவித்த இவர் திருமணமாகி இரு
பிள்ளைகளின் தந்தை எனவும் மனைவி தன்னை பிரிந்து சென்று வேறொருவருடன் வாழ்வதால் பிள்ளைகளுக்கு தாயொருவர் தேவை என்பதால் தம்மை திருமணம் செய்து கொள்ள விருப்பமா எனக் கேட்டபோது முறைப்பாட்டாளர் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் காதலர்களாக சில காலம் பழகியதாக தெரிவிக்கும் முறைப்பாட்டாளர் தம்மை தோஹா கட்டார் இராச்சியத்துக்கு அழைப்பித்துக் கொள்ள சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்ததாக பெண் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பணம் இல்லாத காரணத்தால் அவரது வங்கிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யும்படி கூறியதால் பல சந்தர்ப்பங்களில் 3,37500 ரூபாவை
வைப்பிலிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டுக்கு மீண்டும் வருகை தரும்போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திலிண கமகே உத்தரவிட்டார்.
பின்னர் எதுவித தகவல்களும் இல்லாததால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக அறிந்து கொண்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி தொலைபேசி அறிக்கைகளின்படி இரு சந்தேக நபர்கள் இச்சம்பவத்துடன் தொடர்பு கெண்டிருப்பதாகவும் இவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

0 Comments