உல்லாசப் பயணம் சென்ற அவிசாவளை பிரதேச பாடசாலையொன்றின் உயர் வகுப்பு மாணவ, மாணவிகள் மதுபோதையில் தம்புள்ளை நகரில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதை அடுத்து தம்புள்ளை பொலிஸார் அந்த இடத்துக்கு சென்று மாணவ, மாணவியரை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்துள்ளனர்.
மாணவ, மாணவிகள் உல்லாசப் பயணத்தின்போது மது அருந்திவிட்டு தம்புள்ளை நகரில் இறங்கி முறையற்ற வகையில் நடந்துகொண்டபோது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மாணவ, மாணவிகள் மீது கல் வீச்சு நடத்த முற்பட்டுள்ளனர்.
அப்போது கல்வீச்சை தடுத்து நிறுத்தி பெரியவர் ஒருவர் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து பொலிஸார் வந்து மாணவ, மாணவிகளை கடுமையாகஎச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.


0 Comments