தனியார் வகுப்புகளுக்குச் சென்று விட்டு தம்புள்ளை பஸ் நிலையத்தில் முறையற்ற தனியார் வகுப்புகளுக்குச் சென்ற மாணவ, மாணவிகள் சிலர் கடந்த சனிக்கிழமை தம்புள்ளை பஸ் நிலையத்தில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதைப் பார்த்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவர்களை எச்சரித்துள்ளார். இவரது எச்சரிக்கையை ஏற்ற சில காதல் ஜோடிகள் பஸ்களில் ஏறி வீடு சென்றுள்ளனர். ஒரு ஜோடி மாத்திரம் கான்ஸ்டபிளது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் பஸ் நிலையத்தில் தரித்து நின்றுள்ளனர். கான்ஸ்டபிள் மீண்டும் சென்று எச்சரித்தபோது காதலன் எங்களுக்கு காதல் செய்ய உரிமை இல்லையா? என வாதிட்டுள்ளார்.
இதை புரிய வைக்க பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த நபரை பொலிஸ் சாவடிக்கு அழைத்துச் சென்றபோது இடைநடுவில் அந்த நபர் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வகையில் நடந்து கொண்ட மாணவ காதல் ஜோடிகளை எச்சரிக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற காதலரொருவரைக் கைது செய்ய தம்புள்ளை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments