ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குருவெல்ல– - கல்பத்த
பகுதியில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்களை பொலிஸார்
மீட்டுள்ளனர். 45 வயதான நபரொருவர் சுருக்கிட்ட நிலையிலும் 35 வயதான
தாயொருவரும் அவரது 10 மாதக் குழந்தையும் கொலை செய்யப்பட்ட
நிலையிலும் இவ்வாறு சடலங்களாக நேற்று மாலை 4.30 மணியளவில்
மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட
அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் இவ்வாறு
இச்சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பெண்ணின் உடலில் கத்திக்குத்துக்
காயங்கள் காணப்படுவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண், சடலங்கள் மீட்கப்பட்ட
வீட்டின் உரிமையாளர் என்பதுடன் சடலமாக காணப்பட்ட பெண்ணும்
குழந்தையும் அவ்வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில்
வசித்தவர்களெனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர். குறித்த ஆண் தனது
மனைவியிடமிருந்து விலகி தனியாகவே அவ்வீட்டில்
வாழ்ந்துவந்ததாகக் குறிப்பிடும் ருவன்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(VK)

0 Comments