Subscribe Us

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 31


1984: இந்­திய பிர­தமர் இந்­தி­ரா­காந்தி சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்

1517 : மார்ட்டின் லூதர், கிறிஸ்­தவ சீர்­தி­ருத்தம் தொடர்­பான தனது 95 கொள்­கை­களை ஜெர்­ம­னியின் விட்­டன்பேர்க் தேவா­லய வாசலில் வெளி­யிட்டார்.

1803 : கப்டன் ட்றைட்பேர்க் தலை­மையில் ஆங்­கி­லேயப் படைகள் பண்­டா­ர­வன்­னி­யனின் படை­களைத் தாக்கின்.

1863 : நியூஸிலாந்தில் நிலை கொண்ட பிரித்­தா­னியப் படைகள் "வைக்­காட்டொ" என்ற இடத்தில்தாக்­கு­தலை நடத்­தி­யதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்­ப­மா­னது.

1876 : இந்­தி­யாவின் கிழக்குக் கரையில் இடம்­பெற்ற மிகப்­பெரும் சூறா­வளி கார­ண­மாக 200,000 பேர் வரை இறந்­தனர்.

1913 :- ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது நெடுஞ்­சாலையான லிங்கன் நெடுஞ்­சாலை திறக்­கப்­பட்­டது.

1924: உலக சேமிப்பு நாள் இத்­தா­லியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்­கி­களின் உலக அமைப்­பினால் அறி­விக்­கப்­பட்­டது.

1931: - தமிழின் முதல் பேசும் பட­மான “காளிதாஸ்” வெளி­யா­னது.

1941:இரண்டாம் உலகப் போரில்  ஐஸ்­லாந்­துக்கு அருகில் அமெ­ரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்­ம­னியின் படகு தாக்கி மூழ்­க­டித்­ததில் 100 அமெ­ரிக்கக் கடற்­ப­டை­யினர்
கொல்­லப்­பட்­டனர்.

1941: இங்­கி­லாந்தில் தொழிற்­சாலை ஒன்று தீப்­பற்­றி­யதில் 49 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1954 : - அல்­ஜீ­ரி­யாவில் பிரெஞ்சு ஆக்­கி­ர­மிப்­புக்­கெ­தி­ராக அல்­ஜீ­ரிய தேசிய
விடு­தலை முன்­னணி போராட்­டத்தை ஆரம்­பித்­தது.

1956 : - ஐக்­கிய இராச்­சியம் மற்றும் பிரான்ஸ் சுயஸ் கால்வாயைத் திறக்க வற்­பு­றுத்தி எகிப்தின் மீது குண்­டு­களை வீசின.

1961 : - ஸ்டாலினின் உடல் மொஸ்­கோவில் உள்ள லெனினின் நினை­வ­கத்தில் இருந்து அகற்­றப்­பட்­டது.

1963 : - இண்­டி­யா­னாவில் பனிக்­கட்டி சறுக்கல் களி­யாட்ட விழா ஒன்றின் போது இடம்­பெற்ற வெடி விபத்தில் 74 பேர் கொல்­லப்­பட்டு 400 பேர் காய­ம­டைந்­தனர்.

1968 : வியட்நாம் போர்: பாரிஸ் அமைதிப் பேச்­சுக்­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து வட வியட்நாம் மீதான அனைத்துத் தாக்­கு­தல்­க­ளையும் நவம்பர் 1 இலி­ருந்து  நிறுத்­து­வ­தாக அமெ­ரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறி­வித்தார்.

1973: அயர்­லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து வெளி­யே­றிய மூன்று ஐரியக்  குடி­ய­ரசு இரா­ணு­வத்­தினர் அங்கு தரை­யி­றங்­கிய கடத்­தப்­பட்ட ஹொலி­கொப்டர் ஒன்றில்தப்­பிச்­சென்­றனர்.

 1984: - இந்­தியப் பிர­தமர் இந்­திரா காந்தி இரண்டு சீக்­கியப் பாது­கா­வ­லர்­களால்
சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். அதன் பின்னர் புது­டில்­லியில் இடம்­பெற்ற கல­வ­ரத்தில் சுமார் ஆயி­ரக்­க­ணக்­கான சீக்­கி­யர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1994 : - அமெ­ரிக்க விமானம் ஒன்று கடும் பனி கார­ண­மாக இண்­டி­யா­னாவில்
விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 68 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 1996 : - விமானம் ஒன்று பிரே­சிலில் வீழ்ந்து நொருங்­கி­யதில் அதில் பயணம் செய்த அனைத்து 98 பேரும் தரையில் 2 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

1999 : - எகிப்­திய விமானம் ஒன்று மசா­சு­செட்சில் வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்த 217 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

2000: - சிங்­கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்­வானில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 83 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2000: - வடக்கு அங்­கோ­லாவில் தனியார் அண்டோனொவ் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

2003: - 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேஷியப் பிரதம மந்திரி மஹதிர் பின் மொஹட் தமது பதவியைத் துறந்தார்.

2011: உலக சனத்தொகை 700 கோடி எண்ணிக்கையை அடைந்தது.

Post a Comment

0 Comments