Subscribe Us

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் விபத்து ;மூவர் பலி 8 பேர் காயம்(படங்கள் இணைப்பு)


புத்தளம்-அநுராதபுரம் வீதியில் பஹரிய என்னுமிடத்தில்  இன்று ( 26 ) காலை  இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீமெந்து ஏற்றப்பட்டிருந்த வாகனத்தில்  வேன் ஒன்று  மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கருவலகஸ்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாதம்பையிலிருந்து ஜயசிறி மகா போதிக்குச்  சென்றவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. 
ஆணொருவரும்,பெண்ணொருவரும் சிறுமியொருவருமே இவ்விபத்தில் பலியாகியிருப்பதாக  பொலிஸார்  தெரிவித்தனர்.
(தகவல் : தமிழ் மிறர் )






Post a Comment

0 Comments