Subscribe Us

header ads

வெல்லுமா ஈரான்? - Dr Arshath Ahamed


 ஈரான் இஸ்ரேல் யுத்தம் தொடங்கி இன்றோடு ஒரு வாரத்தை அண்மிக்கிறது. யுத்தம் ஆரம்பிக்கும்‌போது, அசைக்க முடியாத பல அடுக்கு வான் பாதுகாப்பு பொறிமுறை, ஆழ ஊடுருவும் மொசாட், நண்பேன்டா என்று சொல்ல அமெரிக்காவின் துணை என்று எல்லாம் இஸ்ரவேலுக்கு பக்கா சாதகமாய் அமைந்திருந்தது. மறுபக்கம் அதறப்பழசான விமானப்படை , நீடித்த பொருளாதார தடை, அவசரத்திற்கு உதவ கூட பக்கத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தன்மீது திணிக்கப்பட்ட போருக்கு பதிலளிக்க இறங்கியது ஈரான். கூட்டிக் கழித்து பார்த்தால் ஆள் பலம், படை பலம், பண பலம், ராஜ தந்திர சப்போட் என எல்லாமே இஸ்ரேலுக்கு சார்பானவை. இது தான் கள‌ யதார்த்தம்.


ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி ஈரானுக்கு என்று ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. அது வரலாறு முழுவதும் ஒரு சாம்ராஜ்யமாக இருந்த பூமி.‌ அரசு நிர்வாகம் , கலை , வகை தொகையான உணவு வகைகள் என இந்த உலகிற்கு பல்வேறு கொடைகளை அளித்த பாரசீக பூமி சொந்தமான நாடு அது. பேரரசர் அலெக்சாந்தர், மற்றும் மாவீரர் கலீபா உமர் அவர்களால் மட்டுமே இதுவரை வெற்றி கொள்ளப்பட்ட பூமியும் கூட. எப்படியோ இஸ்லாமிய கிலாபத் அதன் எழுச்சியில் முதன் முதல் வெற்றி கொண்ட ஒரு சாம்ராஜ்யமாக இருந்தது இந்த பாரசீகம். அப்போது ஒரு நாட்டை ஆள்வது எப்படி என்பது கூட கிலாபவிற்கு தெரியாமல் இருந்த ஆரம்ப காலத்தில், மதீனாவில் இருந்த தலைநகர் பாக்தாத் நோக்கி நகர்வதற்கும், கிலாபா ரோமை வெற்றி கொள்வதற்கும், ஒரு காலகட்டத்தில் 2/3 பங்கு உலகை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்கும் அடிப்படை, பாரசீகம் இஸ்லாமிய ஆளுகைக்குள் வந்ததும், அவர்களின் சாம்ராஜ்ய நிர்வாகம் பற்றிய திறன்களுமே காரணமாக அமைந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. கடைசியில் அதுவே சர்வதேச முஸ்லிம் அரசியலின் இரு கூர் வாளான ஷியா - சுன்னி கூராடங்கள் உருவாகுவதற்கும் காரணமாக அமைந்தது என்பது வேறு கதை.

எது எப்படி இருந்தாலும், உலகின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட சாம்ராஜ்ய வாரிசுகளான ஈரானியர்கள், வந்தேறு குடிகளுக்கு இப்போது ஒரு நல்ல பாடத்தை படிப்பித்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட நெடிய யுத்தம் ஒன்று நடந்தால், அது எப்படி இருக்கும் என்பதை செவிட்டில் அறைந்தால் போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அயன் டோமையையும், தாவீதின் வில்லையும் அவர்கள் உடைத்து எறிந்து கொண்டிருக்கிறார்கள். யுத்தம் தொடங்கும் போது ஈரான் ஏவிய மொத்தமும் நடுவானிலே இஸ்ரவேலால் தடுக்கப்பட்டன. வெறும் 20% ராக்கெட்டுக்களே இஸ்ரேலில் விழுந்தன. அதுவும் இலக்கு இல்லாமல் சும்மா விழுந்து நொறுங்கின. இப்போது அது 70% வரை உயர்ந்திருக்கிறது. துல்லியமான இலக்குகளை தாக்குகிறது. இன்னும் ஒரு வாரம்‌ போனால், அது 90% எட்டிப் பிடித்து விடும் என்று சொல்கிறார்கள் போரியல் வல்லுனர்கள். இப்படி இராட்சத பலம் கொண்டு அடிக்கும் ஈரானுக்கு வேறு எந்த நாடும் ஆயுதம் சப்ளை செய்யவில்லை. இவை எல்லாவற்றையும் தங்கள் உள்நாட்டு உற்பத்திகளையும் தொழில்நுட்பங்களையும் வைத்தே, பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ஈரானிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இதன் ஹைலைட். விசேடம்.

ஆக மொத்தத்தில், இப்படியே யுத்தம் போனால் , அமெரிக்கா நேரடியாக சண்டையில் இறங்காமல் இருந்தால், சீனாவும் ரஷ்யாவும் ஒத்துழைத்தால், இனி உலகின் அரசியல் போக்கு வேறு ஒரு திசைக்கு மாறும். சீன ஜனாதிபதி சொன்னது போல அது அமெரிக்காவின் இன்புளுவன்ஸ் இல்லாத உலகமாக இருக்கும். அது நிச்சயம் ஈரானை மத்திய கிழக்கின் ஜாம்பவானாக மாற்றும். அதன் பாரசீக கனவை மீண்டும் கிளர்ந்தெழச் செய்யும். ஆனால் அந்த மாற்றத்தை அமெரிக்காவும் அறபு நாடுகளும் எந்த விலை கொடுத்தாவது தடுக்கும் என்பது தான் இப்போதைக்கு கசப்பான உண்மை.

Dr Arshath Ahamed

Post a Comment

0 Comments