Subscribe Us

header ads

கற்பிட்டி மண்ணிலிருந்து Division - iii கடினப் பந்து போட்டிக்கு முதல் வீரராய் கால் பதித்தார் S.H.M. முஸம்மில்.

 


இலங்கையின் கழக மட்டப் போட்டிகளின் அடிப்படையிலே இலங்கை தேசிய அணிக்கு வீரர்கள் உள்வாங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இலங்கை தேசிய அணிக்கு அடுத்த படியாக இலங்கை ஏ அணி, இலங்கை வளர்ந்து வரும் அணி, இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி ஆகிய அணிகளுக்கும் கழக மட்ட அணிகளில் திறமையை நிரூபிக்கும் வீரர்களே இடம்பிடிக்கின்றனர். ஆக கழக மட்ட போட்டிகள் DIVISION- 1 , DIVISION -2 மற்றும் DIVISION - 3 என இடம்பெறும். அதனடிப்படையில் Division - 3 இல் இருந்து தான் முன்னோக்கி சென்று தேசிய அணியில் வீரர்கள் இடம்பிடிப்பது வழமை.


அவ்வகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இவ்வருடத்திற்கான Division - 3 போட்டிகள் ஆரம்பமாகியிருக்கும் இவ்வேளையில் எம் கற்பிட்டி மண்ணின் அதி வேகப்பந்து வீச்சாளரான Hameed Musammil தனது முதல் Division -3 போட்டியில் நேற்று ( 16.07.2023) புத்தள மாவட்டத்தின் ஒரு தசாப்த கடினப் பந்து அனுபவத்தைக் கொண்ட தலைசிறந்த கழகமாக மதுரங்குளி கிரிக்கெட் கழகத்தினை (MCC) பிரதிநிதித்துவம் செய்து கற்பிட்டிப் பிரதேசத்திலிருந்து முதல் வீரனாய் பங்கேற்றார்...

இப்போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய முஸம்மில் எதிரணியான சிலாபம் பிரதேசத்தின் மய்யாவ அணியை தனது வேகத்தின் ஆல் நிலை குலையச் செய்து 10 ஓவர்கள் பந்து வீசி 1ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 35 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 3 மிகமுக்கியமான விக்கட்டுக்களை வீழ்த்தி மதுரங்குளி அணியின் வெற்றிக்கு பங்காற்றியிருந்தார். மேலும் இப்போட்டியில் MCC அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது....

எனவே எம் மண்ணிலிருந்து முதல் வீரனாய் முதல் தர கழக மட்ட கடினப் பந்து போட்டியில் கால் பதித்திருக்கும் இவ் விடா முயற்சி மிக்க வீரனுக்கு பாராட்டுக்களும், வளமான எதிர்காலம் அமைந்திட பிரார்த்தனைகளும், இனி வரும் போட்டிகளிலும் மிகச் சிறப்பாய் பிரகாசித்திட முன் கூட்டிய மனம் நிறைந்த வாழ்த்துக்களும்......

இவன்
பஹர்தீன் அரபாத்.

Post a Comment

0 Comments