மட்டக்களப்பு பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியதிய நால்வரை புதன்கிழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த 45 வயதுடையவர் தனது காணியை விற்று அந்த பணத்தில் ஆறரை இலட்சம் ரூபாவை மூத்த சகோதரனுக்கு கடனாக வழங்கி மத்திய கிழக்கு நாட்டுக்க சென்று கடந்த 2 மாதங்களக்கு முன்னர் திரும்பி வந்துள்ளார்.
இந் நிலையில் கொடுத்த கடனை கேட்டு சகோதரனின் வீட்டுக்கு சென்ற போது அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து அவர் மீது அவரது சகோதரன், சகோதரியின் கணவர் மற்றும் அவர்களது மகள் சேர்ந்து தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
இச் சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். அதிலிருவர் பெண்களாவர். அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
0 Comments