முதல் முறையாக வெளிநாட்டில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐக்கிய இராச்சியத்தின் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இன்று (04/05/2023) நடைபெற்றது.
இதில் 230 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8000 ஆசனங்களுக்கான போட்டியில் பலர் களமிறங்கியுள்ளனர்.
* மிகவும் அமைதியான முறைமை.
* பதாகைகள் ஒன்றும் இல்லை
* பாதுகாப்பு ஒன்றும் இல்லை
* வாகன நெரிசல் இல்லை.
* கூட்டம் அறவே இல்லை. காரணம் பல தொகுதிகளில் பல வாக்கு சாவடிகள்.
* பாதைகள் மூடப்படவில்லை
* தேர்தல் நடப்பது போன்ற ஒரு அறிகுறியும் இல்லை
* வாகன நெரிசலோ போக்குவத்து ஏற்பாடுகளோ இல்லை
* ஒரு சிறிய Container Box உள்ளே, இரண்டு உத்தியோகத்தர்கள் மட்டுமே இருந்தனர்.
* மிகவும் எளிமையான paper மூலமான வாக்குச்சீட்டு.
* இரண்டு கட்சிகளின் பெயர்களும் மாத்திரமே, ஒரு கட்சியில் 3 வேட்பாளர்கள் சகிதம் 6 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே காணப்பட்டது. ஒருவர் ஒரு கட்சிக்கு மாத்திரமே வாக்களிக்கலாம்.
அந்த கட்சியின் 3 வேட்பாளர்களுக்கும் தெரிவு வாக்குகளை போடலாம்.
* வழமையான வாக்கு இடாப்பில் பெயரை பார்த்த பின்னர் ID உறுதிசெய்யப்பட்டு, Ballot paper வழங்கப்படும்.
(Ilham marikkar)
0 Comments