Subscribe Us

header ads

(UK) ஐக்கிய இராச்சியத்தின் வியக்க வைக்கும் தேர்தல் முறை !

 


முதல் முறையாக வெளிநாட்டில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐக்கிய இராச்சியத்தின் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இன்று (04/05/2023) நடைபெற்றது.

இதில் 230 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8000 ஆசனங்களுக்கான போட்டியில் பலர் களமிறங்கியுள்ளனர்.

பின்வரும் விடயங்களை அவதானித்தேன் .

* மிகவும் அமைதியான முறைமை.

* பதாகைகள் ஒன்றும் இல்லை

* பாதுகாப்பு ஒன்றும் இல்லை

* வாகன நெரிசல் இல்லை.

* கூட்டம் அறவே இல்லை. காரணம் பல தொகுதிகளில் பல வாக்கு சாவடிகள்.

* பாதைகள் மூடப்படவில்லை

* தேர்தல் நடப்பது போன்ற ஒரு அறிகுறியும் இல்லை

* வாகன நெரிசலோ போக்குவத்து ஏற்பாடுகளோ இல்லை

* ஒரு சிறிய Container Box உள்ளே, இரண்டு உத்தியோகத்தர்கள் மட்டுமே இருந்தனர்.

* மிகவும் எளிமையான paper மூலமான வாக்குச்சீட்டு.

* இரண்டு கட்சிகளின் பெயர்களும் மாத்திரமே, ஒரு கட்சியில் 3 வேட்பாளர்கள் சகிதம் 6 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே காணப்பட்டது. ஒருவர் ஒரு கட்சிக்கு மாத்திரமே வாக்களிக்கலாம்.

அந்த கட்சியின் 3 வேட்பாளர்களுக்கும் தெரிவு வாக்குகளை போடலாம்.

* வழமையான வாக்கு இடாப்பில் பெயரை பார்த்த பின்னர் ID உறுதிசெய்யப்பட்டு, Ballot paper வழங்கப்படும்.

(Ilham marikkar)

Post a Comment

0 Comments