இலங்கையில், பிறந்த குழந்தைகளை அனாதைகளாக விடும் அவலம் அதிகரித்திருக்கும் நிலையில் குழந்தை தொட்டில் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பிறந்த தங்களது குழந்தைகளை பராமரிக்க இயலாமல் அல்லது முடியாமல் இருக்கும் பெற்றோர், அந்த தொட்டிலில் குழந்தைகளை சேர்ப்பித்துவிட்டால், இலங்கை அரசே பொறுப்பேற்று குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர் சாலைகளில் விட்டுச் சென்றதும், கடந்த 6 ஆண்டுகளில் இப்படி 80 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதுமே இந்த திட்டத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தொட்டிலில் விடப்படும் குழந்தைகளின் பெற்றோர் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments