கொழும்பு நகரில் நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் பக்க கண்ணாடிகளை திருடி வந்த இரண்டு சந்தேகநபர்கள், வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து 10 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கரவண்டியும், வாகன பக்க கண்ணாடிகள் நாற்பதும் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
திருடப்படும் கண்ணாடிகளை விற்பனை செய்த பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வியாபார நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 35 மற்றும் 39 வயதுடையவர் களென தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக கொழும்பு நகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை நூதனமாக திருடிய இவர்கள், மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்கள் மற்றும் பக்க கண்ணாடிகளை விற்பனை செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.இது தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
இதையடுத்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அணியினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments