Subscribe Us

header ads

நீண்ட நாட்களுக்கு பிறகு கெலிஓயா சம்பவத்திற்கு பின் எமோர்சனல் ஏகாம்பரம் (கம்பளை முனவ்வரக்காக) வெளிவந்திருக்கிறார்கள்.

 


நம்மோடு இருக்கும் எமோர்சனல் ஏகாம்பரம் சில நேரங்களில் தடாலடியாக வெளிவருவார்.!


நீண்ட நாட்களுக்கு பிறகு கெலிஓயா சம்பவத்திற்கு பின் எமோர்சனல் ஏகாம்பரம் வெளிவந்திருக்கிறார்.

இப்பொழுது அனைவரும்,ஊரை திருத்தனும்,வெட்டனும்,குத்தனும்,ஆணி அடிக்கனும் னு பல எமோர்சனல் ஏகாம்பரங்கள் கிழம்பியிருக்காங்க !

நல்லது,எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம். என்ன நடவடிக்கை என்று பார்ப்போம், எடுக்க போகும் நடவடிக்கைகளின் பின் ஊர் எப்படியிருக்கிறது என்று சில நாட்களில் பார்ப்போம்.!

இதை ஏன் சொல்கிறேன் கடந்த வருடம் May 28ம் திகதி இலங்கையையே கலங்க வைத்த ஒரு சம்பவம்,அட்டுலுகமை ஆயிஷா மரணம். எத்தனை கட்டுரைகள்,ஆர்ப்பாட்டங்கள்,நடவடிக்கைகள். !!!

அப்பப்பா.., வெட்ட போகிறோம்,குத்த போகிறோம் எத்தனை பேர் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். ஆயிஷாவின் தந்தையும் போதைக்கு அடிமையாகித்தான் இருந்தார்.

இன்றைய நாளைப்பற்றி பேசுவோமே !!

அவர் முழுவதுமாக போதையில் இருந்து வெளிவந்தாரா ? அந்த ஊரில் போதை பாவனை முழுவதுமாக குறைந்ததா ? ஊரில் போதை பொருள் விற்பவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டார்களா ? போதைபாவனையில் இருந்தவர்களை புனர்வாழ்வை கொடுத்து திருந்தி நல்ல நிலைக்கு மாற்றினார்களா ? மாறினார்களா ?

இதில் ஏதாவது ஒன்று முழுவதுமாக நடந்தேறியிருக்கிறதா என்று நீங்களே தேடிப்பாருங்கள். சில நேரம் நீங்களே ஆச்சரியபடக்கூடிய “ஏன்ட ரப்பே” னு சொல்லும் அளவுக்குத்தான் நிலமை இருக்கிறது.!

நம்மோடு இருக்கும் இந்த எமோர்சனல் ஏகம்பரம் இருக்கிறானே,அவன் ஒரு லூசுத்தனமாக கிறுக்கன். எப்பொழுதும் ஏதாவது பதிவு,இல்லையென்றால் எதிர்ப்பு கட்டுரை பகிர்வு,அல்லது பள்ளி நிர்வாகத்தை குறை கூறி,பதிவு எழுதிவிட்டு கடந்து விடுவான்.! வாங்களேன் Fieldக்கு இறங்கி வேலை செய்வோம் என்று கூப்பிட்டால் வரமாட்டான்.! அப்படித்தான் ஒருத்தனாவது ஏதாவது செய்ய வெளிவந்தால் அவனைக்கு ஏதாவது சொல்லி,போட்டு குழப்பியடித்து விடுவான்.! வீட்டுக்குள்ள இருந்து Advise மட்டும் பன்னுவான்.!

இதை ஏன் சொல்கிறேன் அட்டுலுகமை ஆயிஷா மரணத்திற்கு பிறகு அதே நாள், நானும் நண்பர் Irham Segudawood அவர்களும் அங்கு சென்றோம். நாம் கேட்டறிந்த,நாம் கண்ட காட்சிகள் எம்மை வியப்பில் ஆழ்த்தின.இத்தனை மோசமாக இருக்கிறதே என்று மனதளவில் மிகுந்த வேதனையடைந்தோம். ஒரு கட்டத்தில் எங்களால் அங்கிருக்க முடியவில்லை. வீடு திரும்பும் போது,இதற்கு பெரியளவில் ஏதாவது செயற்திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், ஊர் ஊராக இதனை செயற்படுத்த ஏதாவது ஒரு திட்டம் வேண்டும் என்றும் பேசிக்கொண்டு பத்திரிகைகளில் இது பற்றி விளக்கங்களை எழுதவேண்டும் என்றும்,அது பற்றி தேவைகளை எழுதி சிறு மாற்றத்தையாவது கொண்டு வர வேண்டும் என்று அதே தினம் இரவு நண்பர் Rifthi Ali அவருடன் பேசிக்கொண்டோம்.

இது 4பேர் பேசி,எந்த மாற்றத்தை கொண்டு வர துளியளவு கூட முடியாது.ஏன் சொல்கிறேன் என்றால் பொரளை மகசின் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி முனையில் அவருடைய வீட்டில் வைத்து அச்சுறுத்தப்பட்டுள்ளார். ஏன் தெரியுமா ? சிறைச்சாலை உள்ளே போதைபொருள் கொண்டு செல்வதை தடுத்ததாகவும்,சிறைச்சாலை உள்ளே போதைபொருள் ஆசாமிகளின் வியாபாரங்களை தடுத்ததற்காகத்தான். மேலும் துப்பாக்கியை தலையில் வைத்தவன் “எங்களுடைய போதை பொருள் வியாபாரத்தை நீ மட்டுமல்ல,எந்த கொம்பன் வந்தாலும் தடுக்க முடியாது என்று” ம் கூறியிருந்தான். இது தான் நாட்டின் நிலமை.! சிறைச்சாலை அதிகாரிக்கே இதுதான் நிலமை என்றால் மற்றதை பற்றி பேச தேவையே இல்லை.

ஆர்ப்பாட்டம் செய்து,அல்லது பயான் வைத்து போதைபொருள் பாவனையை தடுக்கத்தான் போகிறீர்கள் என்றால் 2023ம் ஆண்டின் ஆகச்சிறந்த அடிமுட்டாள் நீங்கள் தான்.!!!

இன்னும் சில நாட்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல இருக்கும் எமோர்சனல் ஏகாம்பரத்தை மீண்டும் எழுப்பி அவரை களைப்படைய செய்ய வேண்டாம்.!!!

எமோர்சனல் ஏகாம்பரத்தை நிரந்தரமாக தூங்க வைத்து விட்டு,என்கவுண்டர் ஏகம்பரத்தை தட்டி எழுப்பி,காத்திரமான ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால் சிறப்பு !

முதல் படத்தில் இருப்பது ஆயிஷாவை புதைத்திருந்த காட்டிற்கு செல்கின்ற பாதை.

இரண்டாவது படம்- போதையால் நாட்டில் சில வருடங்களுக்குள் கொலை செய்யப்பட்ட குழந்தைகள்/யுவதிகள்.!

அசீம் ஜவ்பர்

Post a Comment

0 Comments