Subscribe Us

header ads

சகவாழ்வின் வெளிப்பாடு- வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது!!! சுத்தம் செய்வதற்கு பன்சலைகள் மட்டுமா இருக்கின்றது?

 


(புகைப்படங்கள் உட்பட செய்திகளில் பரவலாக இச்செய்தி வந்ததால் குறிப்பாக முஸ்லிம் கலாசார திணைக்களமும் தமது முகநூலில் பதிவிட்டிருப்பதால் இது பற்றிய விளக்கமும் விழிப்புணர்வும் சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு)


புத்தளம் காஸிமிய்யா அரபு மத்ரஸா மாணவர் உட்பட அதிபர் முதல் முஸ்லிம் பெண்களும் பௌத்த விகாரையை (பன்சலையை) சுத்தம் செய்யும் கண் கொள்ளாக் காட்சி..என்ன சொல்ல இருக்கிறது

😭😭😭
இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் பௌத்தர்களில் ஒருவர் கூடவா இவ்விகாரையை சுத்தம் செய்ய கிடைக்காமல் போனது!!! விசித்திர உலகம்!!!

இங்கு கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் வேண்டுமென்றே விடப்படுகின்றன...சக வாழ்வில் ஏதோ பாகுபாடு உள்ளது போன்று விளங்குகின்றது

😁
உற்று நோக்கி அவதானித்தால் சகவாழ்வில் பள்ளிவாயல்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று தான் கருத முடிகிறது....இவ்வாறு பள்ளிவாயல்களில் அவர்களை அழைத்து சிரமதான ஏற்பாடுகள் செய்யலாமே

🥺
சகவாழ்வில் பௌத்த விகாரையை சுத்த செய்வதைத் தவிர அதனை பிரதிபலிக்கும் ஏனைய சமூக விடயங்கள் கண்களுக்கு தெரியாமல் போனதேனோ தெரியவில்லை.

இஸ்லாத்தையும் ஏனைய மதங்களையும் பிரித்துக் காட்டும் பிரிகோடே ஓரிறைக் டோட்பாடாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை எந்நிலையிலும் ஒருமைப்படுத்தி வணக்கங்களை அவனுக்கு மாத்திரம் செய்வதே இஸ்லாத்தின் அடி நாதமாகும்.

இதில் சிறு சருகுதல் ஏற்பட்டாலும் இஸ்லாத்தை விட்டும் நெறி பிறழ 100% வாய்ப்புள்ளதை யாவரும் அறிந்த விடயம். விடயம் இவ்வாறிருக்க சமூக நல்லிணக்கம்/ சகவாழ்வு என்பதுபன்சலைகள், கோவில்கள், தேவாலயங்களை சுத்தம் செய்வதைத் தான் குறிக்கின்றதா என்றால் இல்லை என்பதே தெளிவான பதிலாகும்.

அல்லாஹ்வை நாம் ஓர் இறைவனாக வணங்கி வழிப்படுவதற்கு ஏற்றிருக்கும் போது, அவனுக்கு நிகராக வேறொரு கடவுளை வணங்கும் பௌத்தர்களது புத்தரை வழிபடும் வணக்கஸ்தளமாக விளங்கும் பௌத்த விகாரையை கூட்டி, கழுவி, சுத்தம் செய்து கொடுப்பது அவ்வணக்கத்து துணை போகும் மிகத் தெளிவான செயல் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இதில் சிலர் கேட்கலாம்...இவர்கள் தான் புத்தரை வணங்கவில்லையே இவ்வாறிருக்க வணக்கம் செய்தது போல் நீங்கள் கூறுவது எவ்வகையில் பொருத்தமாகும்???

ஒரு வணக்கத்தை செய்வதும் அவ்வணக்கத்துக்கு உந்துதலாக இருக்கும் விடயங்களை, அதற்கான வழிகளை செய்து கொடுப்பதும் மிகத் தெளிவாக சமமான விடயங்களாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் ஏனைய யூத, கிறிஸ்தவ மக்களோடு சகவாழ்வு/ சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்த போது "லகும் தீனுகும் வலியதீன்" எனும் தெளிவான பிரிகோடோடும் புரிந்துணர்வோடும் வாழ்ந்து காட்டியது மட்டுமல்லாது ஒரு நாள் கூட மாற்று மத மக்களது வணக்கஸ்தளங்களை சுத்தம் செய்து தமது சகவாழ்வை வெளிக்காட்டியது கிடையாது.

நபியவர்களும் ஸஹாபாக்களும் ஏனைய மாற்று மத மக்களோடு வியாபாரம் செய்துள்ளார்கள், கடன் பெற்றுள்ளதோடு அடமானம் வைத்து நம்பிக்கை நாணயமாக சமூக நல்லிணக்கத்தை பேணி நடந்துள்ள போதும் மாற்று மத மக்களது வணக்கங்களிலோ அவர்கள் மத ஸ்தளங்கங்களை சுத்தம் செய்து அங்கு மண்டியிட்டு தமது உயரிய இஸ்லாத்தை தாரை வார்த்து சகவாழ்வை வெளிப்படுத்தவில்லை. இதற்கான தேவையுமில்லை.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் போதித்த, வழிகாட்டிய புனித இஸ்லாத்தில் இருந்து கொண்டு, அவர்கள் விக்கிரக வணக்கங்களுக்கெதிராக செயற்பட்ட போது உள்ளான சோதனைகள், தியாகங்களை படிந்தறிந்து கொண்டு இவர்கள் (காஸிமிய்யா அதிபர் உட்பட ஏனைய தலைமைகள்) இவ்வாறு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தை தலை குனிய வைக்கும் செயல் மட்டுமல்லாது மாரக்கத்தை புறக்கணிக்கும் பாரிய குற்றச் செயலுமாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخسرين

இஸ்லாம் ஒரு முஸ்லிமிடத்தில் உயர்வாக இருக்க வேண்டும். மார்க்கத்திற்கு பாதிப்பு வரும் எனும் நிலை வருமெனில் ஒரு முஸ்லிம் தனது மானம், உயிர், சொத்து, குடும்பம் அனைத்தையும் பார்க்கிலும் மார்க்கத்திற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஆனால் இன்று சகவாழ்வு, மத நல்லிணக்கம் எனும் பெயரில் லேபல் முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தை மிதித்து தாரைவார்த்துக் கொடுப்பதானது இஸ்லாத்தில் இருந்து கொண்டு முனாபிக்காக ஏன் அதைவிட கீழே போய் கோழையாக வாழ்வதை தெளிவாக பறைசாற்றுகிறது. இதை விட கேவலம் வேறென்ன இருக்க முடியும்!!!

இஸ்லாத்தை அவமதிக்கும் செயலை கற்றறியாத ஒருவர் செய்தால் அவருக்கு பாவமில்லை, இவ்விடயம் ஒரு பேசுபொருளாக அமையாது. ஆனால் மார்க்கத்தை கற்று, விளங்கி, தனக்கென ஒரு மாணவ வட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு இஸ்லாத்தை கற்பிக்கும் இலங்கையில் பழைமை வாய்ந்த மத்ரஸாவாக திகழும் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கலாசாலையின் அதிபர் உட்பட ஏனைய சமூகப் பொறுப்பிலுள்ளவர்கள் முன்னின்று செய்வது தான் சமூகத்தில் ஒரு பலர் வழிகெடுவதற்கும், மற்றொரு சாரார் இவர்கள் மார்க்கத்தை உதாசீனம் செய்யும் கூட்டத்தினரா எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் காரணமாக அமைகிறது.

ஸஹாபாக்களால் உயிர் தியாகம் செய்யப்பட்டு, அருமை நபியின் உதிரம் கொட்டப்பட்டு, பல் உடைக்கப்பட்டு, அவமானம், சமூக புறக்கணிப்பு, ஹிஜ்ரத் என பல அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம், வாழையடி வாழையாக இலகுவாக கிடைத்ததால் அருமை தெரியாமல் அற்பமாக கருதி அலட்சியம் செய்யப்படும் நிலைக்கு சென்றுள்ளதை நினைக்கையில் கவலையளிக்கிறது.

அல்லாஹ் தான் எமது சகோதரர்களுக்கு முக்கியமாக சமூக தலைமைகளாக விளங்கும் கற்ற ஆலிம்களுக்கு அறிவையும் தெளிவையும் வழங்க வேண்டும்!

இறைவா மரணம் வரை உனக்கு இணை வைப்பதை விட்டும், அதற்கு உதவியாக இருப்பதை விட்டும் எம்மையும் எம் சந்ததியினரையும் பாதுகாத்தருள்வாயாக!

هداهم الله وإيانا جميعا إلى الحق المبين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

Post a Comment

1 Comments

  1. இதற்கு வழிகாட்டி ஜம்மியா தலைவரே 2019 இல் குண்டு பெடித்தபோது தேவாலயத்தில் மெழுகுதிரி ஏந்தி வழிபட்டு உலகிற்கே முன்மாதிரியாக இருந்தாரே
    பதவி வெறி அப்படி செய்ய தூண்டியது அதையும் இதில் குறிப்பிட்டு இருக்கனும்

    ReplyDelete