உயர் தரம் விஞ்ஞான கணித பிரிவின் இமாலய முயற்சியின் பாகம் இரண்டு.
அல் அக்ஸா தேசிய பாடசாலை யின் முதலாவது விஞ்ஞான கணித பிரிவின் முயற்சிகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்,அதன் இரண்டாம் கட்ட மாணவர்கள் சேர்வு மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.
அல் அக்ஸா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ரோஸ் புகாரி அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த முயற்சியின் தொடர் தற்போதைய அதிபர் முஸ்தபா அன்சார் அவர்களின் தலைமையில் பல சவால்களைக்கடந்து முன்னேறிச் செல்வது மன மகிழ்வைத்தந்தாலும் இன்னும் பல படிகளைக்கடக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
பல போராட்டங்கள் கஷ்டங்களுக்கு மத்தியிலும் சளைக்காமல் இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்லும் ஏற்பாட்டுக்குழுவினருக்கு எமது பிரார்த்தனைகள் என்றென்றும் உண்டு.
பெற்றோர்கள் என்ற ரீதியில் இவர்களது சேவையின் கனதி அற்பணிப்பு எங்களால் அதிகமாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
பல குழி தோண்டல்களையும் மூடி இலக்கை அடைய களைத்தும் சழைத்தும் ஏங்கும் நேரம் மீண்டும் உத்வேகம் எடுப்பது இந்த திட்டம் கல்பிட்டி வரலாற்றில் தடம் பதிக்கும் என்பது எமது நம்பிக்கை.
கல்பிட்டி பிரதேசத்தில் விஞ்ஞான கல்வி அறிமுகத்தின் முக்கிய அங்கமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த குறிப்பிடத்தக்க முயற்சியை ஒழுங்கமைத்து செயல்படுத்துவதில் அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு எங்கள் முழு மனதுடன் ஆதரவை வழங்கும்போது எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளன.
இந்த உன்னத நோக்கத்திற்காக நிதி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பங்களித்த ஒவ்வொரு உறவுக்கும் எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றிணைந்து கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் வாழ்வில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொள்வோம்.
மீண்டும் ஒருமுறை, இந்த science project உயிருடன் இருக்க உண்மையாகப் பங்களித்த ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த அசாதாரண பயணத்தின் ஒரு பகுதியாக நாமும் இருப்பதற்கு நன்றி. ஒன்றாக, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், தலைமுறைகளைத் தாண்டிய அறிவியல் மீதான அன்பை வளர்க்கலாம்.
பயமின்றி தொய்வின்றி உங்கள் பிள்ளைகளையும் ஒப்படையுங்கள்.
நமக்கான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
Kalpitiya Science project
பெற்றோர் சார்பாக.
A.S.SAAHIR
18/05/2023
0 Comments