Subscribe Us

header ads

அலி சப்ரி ரஹீம் அவர்களின் தீவிர கண்கானிப்பில் இலாபமீட்டிய புத்தளம் பெருநாள் சந்தை. (விபரம் இணைப்பு)

 


பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் அலிசப்ரி ரஹீம் அவர்களது சமூக ரீதியான பார்வைகள் வித்தியாசமானதும் , விசாலமானதுமாகும்.


எப்போதெல்லாம் ஒரு விடயத்தை செய்வதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ , அப்போதெல்லாம் அந்த விடயத்திலே இவர் வெற்றி வாகை சூடி சாதித்துக்காட்டியுள்ளார்.

இம்முறை நோன்பு பெருநாள் சந்தைக்கான திட்டமிடலையும் , அழகிய முறையிலே நடைமுறையாக்கி , புத்தளம் நகர சபைக்கு முனபொரு போதும் இல்லாத அளவு மிகப்பெரிய தொகை நிதியொன்று கிடைக்க வழியமைத்துள்ளார் நமது கௌரவ உறுப்பினர்.

(இவ்வருடம் 2023

சராசரியாக ஒரு நாளைக்கு 1,644,725.00

இரண்டு நாட்களுக்கு 3,289,450.00

2022 ஆம் ஆண்டு நோன்பு பெருநாள் சராசரியாக ஒரு நாளைக்கு 924,253.00

மூன்று நாட்களுக்கு 2,772,760.00)

அந்த கணக்கு வழக்கு விபரங்களை நகர சபை செயலாளரே உறுதி படுத்தியுள்ளார் அது உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறோம்.

அதே அளவு காணியிலே , அதேயளவு கடையிலே , கடந்த வருடம் நோன்பு பெருநாளுக்கு கணக்கு காட்டப்பட்ட கடைகள் 147 கடைகளாகும்.

இம்முறை நோன்பு பெருநாளுக்கு வழங்கப்பட்ட கடைகள் 191 கடைகளாகும்.

கடந்த வருடம் 47 கடைகளுக்கான வருமானம் ஏதானது என்பதும் , அல்லது கடைகளுக்கான இடைவெளி பயன்படுத்த படவில்லையா என்பதும் , இங்கு எழுகின்ற கேள்வி.

அது போல சென்ற முறை நோன்பு பெருநாளுக்கு , மூன்று இரவுகள் கடைகள் நடாத்தப்பட்டு , நகர சபை பெற்ற வருமானம் 2,772,760.00 ஆகும்.

அதாவது சராசரி கணக்கு படி , ஒரு இரவுக்கு 924,253.00 ரூபா மட்டுமே வருமானம் என்ற கணக்கே காட்டப்பட்டுள்ளது.

ஆனால் , பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலிசப்ரி ரஹீம் அவர்களது வழிக்காட்டலிலே , இரண்டு இரவுகள் மாத்திரமே கடைகள் வழங்கப்பட்டு , நகர சபைக்கு கிடைத்துள்ள வருமானம் 3,289,450.00 ஆகும்.

சராசரியாக பார்த்தால் ஒரு இரவுக்கான வருமானமாக 164,4725.00 ரூபாவாகும்.

இதனடிப்படையிலே பார்க்கின்ற போது , கடந்த வருடங்களிலே இந்த விடயங்கள் சரியாக கையாளப்படாமையால் , மக்கள் சேவைக்கு வர வேண்டிய பணங்கள் வந்து சேரவில்லை என்பது புலப்படுகிறது.

ஒரு நாளுக்கான சராசரி வருமானம் சென்ற நோன்பு பெருநாளுக்கும் , இம்முறை பெருநாளுக்கும் இடையிலே 720,472.00 வித்தியாசமானில் , சென்ற முறை மூன்று இரவுக்குமான அண்ணளவான இழப்பு 2,161,416.00 ரூபாவாகும்.

இது புத்தளம் நகர மக்களின் சேவைக்கான இழப்பாகும்.

அதே நேரம் , அதே சுற்றளவு பரப்பளவு காணியிலே , கடந்த வருட நோன்பு பெருநாளுக்கு 47 கடைகள் குறைந்தமையும் மக்களுக்கான ஒரு இழப்பேயாகும்.

இத்தனைக்கும் அன்றாட சந்தை நடத்துவோரிடம் கடந்த வருடம் பெறப்பட்ட தொகை - 634,760.00

இந்த முறை நமது வியாபாரிகளிடம் குறைந்த தொகையே பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அத்தொகை 472,450.00 மட்டுமே.

இவ்வாறு நமது சபைகளதும் , நமது மக்களின் வியாபார விடயங்களிலும் , நமது பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலிசப்ரி ரஹீம் அவர்கள் தீவிர கரிசனை காட்டி வருகிறார் என்பதையும் மகிழ்வோடு கூறுகிறோம்.

ஞாயிறு சந்தை , உள்ளூர் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர் எனபோருக்கான நலன் என்பவற்றிலும் இவரது பார்வை தொடர்கிறது.

முக்கிய குறிப்பு: இந்த ஒப்பீடு நோன்பு பெருநாளுக்கான ஒப்பீடு மாத்திரமே இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு இதனை மிகவும் நேர்த்தியான முறையில் விடயங்களை திட்டமிட்டு மக்கள் பணம் மக்களுக்கே பயன்படுத்தப்பட எம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம்.

Post a Comment

0 Comments