Subscribe Us

header ads

செல்வங்களில் அரிய செல்வங்களை பாதுகாத்துக் கொள்வது பெற்றாரது கடமையாகும்.


வீட்டில் இருக்கும் வரை தான் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
 
பருவ வயதிற்கு முன்னர் கல்வி சமயக்கல்வி என முழு நேர ஹாஸ்டல்களில் விடுவதும் பாதுகாப்பற்றதே!
 
வீட்டு வாசல் தாண்டி விளையாடச் சென்றாலும் அவர்கள் மீது கண் வைத்திருக்க வேண்டும்.
 
பதின்ம வயதடைந்த பிள்ளைகள் வீடுகளுக்கு உள்ளிருந்தாலும் அவர்களது தொடர்பாடல்கள் குறித்த அவதானம் வேண்டும்!
 
பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்வதும் வருவதும் பாதுகாப்பான ஏற்பாடுகளுடன் இடம் பெற வேண்டும்!
 
காலை ஆகாரத்திற்கு கை செலவிற்கு என காசு கொடுத்தாலும் செலவினங்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
 
வழமைக்கு மாறாக அதிக சோர்வு, அதிக நித்திரை, இரவில் விழித்திருத்தல், அதிக நேரம் மலசல கூடங்களில் இருத்தல், அதிகமாக உணர்ச்சி வசப்படல் ஆபத்தின் அறிகுறிகள் ஆகும்.
 
தாய் தந்தையரது அன்பும் அரவணைப்பும் அவர்களது மனதில் உள்ளவற்றை சொல்வதற்கான அவகாசமும் கிடைக்கா விட்டால் இலகுவாக காவு கொள்ளப் படலாம்!
 
செல்வங்களில் அரிய செல்வங்களை பாதுகாத்துக் கொள்வது பெற்றாரது கடமையாகும்.
 
வேலியே பயிரை மேயும் பாதுகாப்பற்ற நிலை தேசத்தில் உருவாகி வருவதனை அண்மைக்காலமாக அதிகம் அறிகிறோம்!
 
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
19.05.2023

Post a Comment

0 Comments