கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் சமய நல்லிணக்க செயற்திட்டத்தின் கீழ் வெசக் அன்னதான நிகழ்வு கல்பிட்டி நகரில் நேற்று 2023.05.06ஆம் திகதி இரவு 07:30 மணிக்கு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பெரும் அளவிலான மக்கள் பங்குபற்றினர்.
கல்பிட்டி மண்டலக்குடா இணைப்பாளர் M. ரிபாய் JP அவர்கள் இந்த அன்னதான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் கல்பிட்டி பசார் பள்ளி தலைவர் அலி சப்ரி, கல்பிட்டி சின்னக்குடிருப்பு இணைப்பாளர் ஜின்னா, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பிரதிநிதிகளாக ஊடக செயலாளர் M. M. நவ்பல் மற்றும் இணைப்பாளர் நிஸ்திகார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் புத்தளம் மாவட்டத்தில் எல்லா இன மக்களின் பிரதிநிதியாக செயற்படுவதால் சமய நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடாக இந்த வெசக் அன்னதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments