Subscribe Us

header ads

“யாராவது வளர்ப்பார்கள் என்று அப்படி செய்தோம்” தாய் வாக்குமூலம்.

 


குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்தே  ரயிலில் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்றதாக குறித்த குழந்தையின் தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் கழிவறையில் நேற்று பச்சிளம் சிசு ஒன்றை கண்டுபிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைக்க பயணிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில் குழந்தையின் பெற்றோர் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது குழந்தையின் தாய் கூறியதாவது,

குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்தே அப்படி விட்டுச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சிசுவின் பெற்றோரான தம்பதி 26 வயதுடைய திருமணமாகாதவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தை தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 25ம் திகதி குழந்தை பிறந்துள்ள நிலையில், நேற்று ரயிலில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments