Subscribe Us

header ads

செம வாழ்க்கைல... 10 திர்ஹம்ஸ் கடனுக்கு கெஞ்சிய அர்லீன்... மில்லியனராக மாற்றிய Mahzooz... மொத்த கடனும் போச்சு... வாழ்க்கையும் மாறியாச்சு!

 


வாழ்க்கை எப்போது நம்மை தூக்கி விடும் என்றே தெரியாது. சிலருக்கு ஒரே இரவில் மிகப்பெரிய சந்தோஷத்தினை அள்ளிக்கொடுக்கும் அந்த வாய்ப்பை தான் பெண்மணி ஒருவர் பெற்று இருக்கிறார்.

அமீரகத்தில் மாதா மாதம் நடந்து வரும் லாட்டரி குலுக்கலில் இந்த மாதத்தின் வெற்றியாளர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 40 வயதான பிலிப்பைனா sales promoter ரொம்பவே சொற்ப சம்பளத்தில் வாழ்ந்து வந்து இருக்கிறார். எப்போதுமே நண்பர்களிடமிருந்து 10 முதல் 100 திர்ஹம்ஸ் வரை கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

அவருக்கு Mahzooz சமீபத்திய சூப்பர் சனிக்கிழமை டிராவில் நடந்த 10 மில்லியன் டாலர் கிராண்ட் பரிசு கிடைத்து இருக்கிறது. இதனால் அவர் ஒரே நாளில் மில்லியனராக மாறிவிட்டார்.

12 ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வரும் ஆர்லீன், புதன்கிழமை தனது காசோலையின் செயல்முறையின் போது செய்தியாளர்களை சந்தித்தார். ப்ளூ டெனிம் ஜாக்கெட்டில் ஸ்டைலாக போஸ் கொடுத்து சென்ற அவர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு ஒரே இரவில் மில்லியனராக மாறிய இரண்டாவது பிலிப்பைன்ஸ் சேர்ந்த வெளிநாட்டவர் அர்லீன். ஜனவரி பிற்பகுதியில், பிலிப்பைன்ஸ் சேர்ந்த வெளிநாட்டவர் 34 வயதாகும் ரஸ்ஸல் ரெய்ஸ் துவாசன், ரேஃபிள் டிராவில் 15 மில்லியன் டாலர்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Mahzoozன் கூற்றுப்படி, 2021ம் ஆண்டில் மஹ்சூஸ் டிரா தொடங்கியதிலிருந்து அர்லீன் உட்பட ஐந்து பிலிப்பினோக்கள் மில்லியனர்களாக மாறிவிட்டனர்.

Mahzoozன் நிர்வாக ஆபரேட்டரான எவிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபரித் சம்ஜி கூறுகையில், “Mahzoozன் பங்கேற்பாளர்களின் இரண்டாவது பெரிய குழு பிலிப்பினோக்கள். மொத்தம் 50,000 பிலிப்பினோக்கள் 350 திர்ஹம்ஸ் முதல் 10 மில்லியன் வரை பரிசுகளை வென்றுள்ளனர். இது மொத்தமாக 62 மில்லியனுக்கும் அதிகமான திர்ஹம்ஸாக மதிப்பிடப்படுகிறது.

ஐந்து வெற்றி எண்களில் (9, 10, 13, 28, 29) ஐந்தில் அர்லீன் பொருந்தினார். அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக Mahzoozல் பங்கேற்று வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஒரு டிக்கெட்டை தொடர்ந்து வாங்கியதை வழக்கமாக வைத்து இருந்தார் என்று கூறப்படுகிறது.

 

Post a Comment

0 Comments