தற்கால பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையிலும் பிள்ளைகளை பரிவாகவும் பன்பாகவும் வளர்த்து அவர்களூடாக ஏதேனும் வருமாணத்தை பெற்று ஓரளவேனும் இந்த கஸ்ட காலத்தில் கால் வயிற்று கஞ்சியேனும் குடித்து வாழலாம் என்ற நோக்கத்திலேயே வருமைப்பட்டு வாழும் ஒருசில பெற்றோர், அவர்கள் அன்போடு வளர்த்த பிள்ளைகளை நம்பிக்கையோடு வேறு பிரதேசங்களுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் அவர்கள், குறிப்பாக மேற்படி வேலை நிமிர்த்தம் யாழ்ப்பாணம் வந்து பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள், எவ்வாறானவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் அவர்களின் கலாச்சாரம் எந்தவகையில் சென்று கொண்டிருக்கின்றது என்றெல்லாம் அந்த பெற்றோர் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பிள்ளைகள் கூறும் கதைகளையே மனப்பூர்வமாக நம்பி வாழ்கின்றார்கள.
பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் பிள்ளைகளே இந்த (இன்டர்நெட்) யுகத்தில் பெற்றோரின் சொல்லை மதிக்காமல் சீரழிந்து போகும் இக் கலியுக காலத்தில் பெற்றோரின் பராமரிப்பில்லாமல் இருக்கும் இதுபோன்றவர்களின் நிலை எவ்வாரிருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை.
இதன் அடிப்படையில் இன்று யாழ் மாநகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று உள்ளங்களை பதறவைத்துவிட்டது.
வருமை காரணத்தால் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பெற்றோரையும் உறவுகளையும் விட்டு வேறு பிரதேசத்தில் இருந்து பிரிந்துவந்த இரட்டை சகோதரிகள், பெற்றோருடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்த இருவரும் மூன்று மாதங்களின் பின்னர் பெற்றோரால் யாழ் நகரில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
நல்ல குடும்பத்தில் ஆன்மீக வழிமுறையில் வளர்க்கப்பட்ட அந்த பிள்ளைகள் அன்னிய கலாச்சார ஆடையுடன் நடமாடுவதைக்கண்டு தாயும் தந்தையும் கதரி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
யாழ் நகரை சேர்ந்த ஒரு சிலரின் சாதுரியமான செயற்பாட்டினால் அந்த பிள்ளைகள் (Marketing management students) ஆக இருந்த கம்பணியில் இருந்து பிரித்து எடுத்து, அவ் யுவதிகள் இருவரும் பத்திரமாக பெற்றோருடன் சேர்த்து அவர்களின் ஆன்மீக வழிமுறையிலான ஆடைகளையும் அணிவிப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்து அவர்களின் ஊருக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவை எமக்கு தெரிந்தவை தெரியாதவை எவ்வளவோ இருக்கலாம்.
ஆகவே இக்காலகட்டத்தில் எமது பிள்ளைகளை முறையான பாதுகாப்பில்லாமல் வேறு பிரதேசங்களுக்கு வேலைக்கு அனுப்புவதோ அல்லது சிறந்த கல்வியை பெற்றுக்கொள்ள அனுப்புவதோ சிறந்த முடிவாகாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மாறாக அப்பிள்ளைகளின் சீரழிந்த வாழ்க்கைக்கு நாமே காரணமாகி விடுகிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
-Suneesh Suresh-
0 Comments