Subscribe Us

header ads

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இரவு நேர வகுப்புகள்.

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் முஸ்தபா அன்சார் அவர்களின் ஆலோசனையில் எமது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் வேறு பாடசாலைகளில் கடமையாற்றி வரும் ஆசிரியர்கள்,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தகுதி வாய்ந்த பழைய மாணவர்களினால் பொற்றோர்கள் ,ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ஆகியோரின் மேற்பார்வையில் க.பொ.த சாதாரண தர மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்காக இரவு நேர மேலதிக வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
 
இதற்கான ஒத்துழைப்பை வழங்கி வரும் பொற்றோர்கள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு
தொடர்ந்து இச்செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கு பொற்றோர்கள் மற்றும் எமது ஊரில் உள்ள ஆசிரியர்கள் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்பை எதிர் பார்க்கின்றார்கள்.

Post a Comment

0 Comments