ஒன்று தங்கம்= எட்டாயிரம் டன் தங்கம் அமெரிக்க அரசின் வசம் பாதுகாப்பில் உள்ளது. போர்ட் நாக்ஸ் எனும் காற்று புகமுடியாத கோட்டையில் இருக்கும் இந்த தங்கத்தை கொள்ளையடிப்பது குறித்து எடுக்கபட்ட படங்களில் மிக பிரபலமானது ஜேம்ஸ் பாண்டின் கோல்ட் பிங்கர் (1964). ஆனால் நிஜத்தில் 26,000 படைவீரர்கள் அதற்கு பாதுகாப்பாய் நிற்கிறார்கள். காற்று கூட உள்ளே போகமுடியாது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிட் செய்வதற்காக மட்டுமே சிறிதளது தங்கம் எடுக்கபடும். புதியதாக சேர்ப்பதும் இல்லை, விற்பதும் இல்லை
26,000 பேருக்கு சம்பளம் கொடுத்து, சோறு போட்டு தங்கத்தை 75 ஆண்டுகளாக இப்படி புதையல் காத்த பூதமாக ஏன் வைத்திருக்கவேண்டும்? ஏன் என்றால் இதை விற்க எல்லாம் வேண்டாம். விற்போம் என சொன்னாலே போதும். உலக தங்க சந்தை சரிந்துவிடும். காரணம் உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 25% அமெரிக்க அரசிடம் தான் உள்ளது.
அடுத்தபடியாக 70 கோடி பீப்பாய் பெட்ரோலையும் பதுக்கி வைத்துள்ளது அமெரிக்கா. வளைகுடா போர் 1970களில் நடந்த சமயம் பெட்ரோல் தட்டுபாடு வந்தால் என்ன செய்வது என சொல்லி நாடெங்கும் ரகசியமாக பெட்ரோலை தேக்க தொட்டிகளை அமைத்து 70 கோடி பீப்பாய் பெட்ரோலை பாதுகாத்து வைத்துள்ளனார்.
மூன்றாவதாக இவர்கள் பதுக்கி வைத்துள்ளது சீஸ்....150 கோடி டன் சீஸை நாடெங்கும் குளிர் பாதுகாப்பறைகள் வைத்து பதுக்கிவைத்துள்ளனர். எதாவது உணவுதட்டுபாடு வந்தால் என்ன பண்ணுவது? சீஸ் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? சீஸ் கெட்டுபோகும் பொருள் என்பதால் கெடுவதற்குமுன் எடுத்து இலவசமாக ஏழைகளுக்கு உணவு வழங்கும் புட் பேங்களுக்கு வினியோகம் செய்வார்கள்.அதன்பின் மீண்டும் சீஸை நிரப்பி குடோன்களை புல் ஸ்டாக்குக்கு கொன்டுவந்துவிடுவார்கள்.
கனடா அரசும் விட்டேனா பார் என மேபிள் சிரப்பை நிரப்பி வைத்துள்ளது. மேபிள் சிரப் என்பது தேன் மாதிரியான ஒரு இனிப்பு. உற்பத்தி கூடுகையில் அதை இங்கே கொன்டுவந்து நிரப்பி விலை சரியாமல் பார்த்துக்கொள்வார்கள். விலை கூடுகையில் இங்கிருந்து சப்ளை செய்து விலை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வார்கள்
போர்ட்க்நாக்ஸில் தான் திருடன் நுழையமுடியாது. மேபிள் சிரப் கோட்டையிலும் நுழையமுடியாதா என்ன? மொத்தம் 4.5 கோடி டன் மேபிள் சிரப் ஸ்டாக்கில் இருக்க, அதில் ஒரு கும்பல் 3000 கிலோ மேபிள் சிரப்பை திருடியது. கனடாவில் இது பெரிய பரபரப்பு ஆகி இதை வைத்து படம், தொலைக்காட்சி தொடர் எல்லாம் எடுத்து துணிவு வங்கிக்கொள்ளை ரேஞ்சுக்கு அதை பெரிய கிரைம் ஆக்கியுள்ள்னர்.
சரி அவர்களுக்கும் பொழுது போகவேண்டாமா என்ன?
~ நியாண்டர் செல்வன்
0 Comments